Saturday, March 21, 2009

டிராவிட் நீக்கம்: பீட்டர்சன் புதிய கேப்டன்


மல்லையாவின் பெங்களுரு ராயல் சாலேன்ஜர் அணிக்கு பதிய கேப்டனாக கெவின் பீட்டர்சன் நியமிக்கப் பட்டுள்ளார். மே மாத தொடக்கத்திலிருந்து கல்லிஸ் காப்டனாக தொடருவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக டிராவிட் விளையாட முடியாததால் தான் அவர் கேப்டன் பொறுப்பில் தொடர முடியவில்லை, அதனால் தான் இந்த மற்றம் என்று சொல்லப் படுகிறது. காரணம் என்னவாகவோ இருந்துவிட்டு போகிறது...ஆனால் டிராவிட் , லக்ஸ்மன் போன்றோர் இந்த ட்வென்டி - ட்வென்டி போட்டிகளுக்க்கெல்லாம் ஒத்துவர மாட்டர்கள். ஏற்கனவே இந்த இருவரும் ஒரு நாள் போட்டிகளில் சேர்க்க படுவதில்லை. 

கிரிக்கெட் மிக வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. அதுவும் இந்த ட்வென்டி-ட்வென்டி வருகைக்கு பின் , வீரர்களில் ஆட்ட முறையில் பல மாற்றாங்கள். ஒரு ஓவருக்கு ஒரு பவுண்டரி இல்ல சிக்ஸ் அடிக்கலான, என்னடா போர் அடிக்குது மேட்ச் சொல்ல தோனுது. இந்த வேகமான ஆட்ட முறைக்கு ஜயசூரியவை தவிர மற்ற சீனியர் வீரர்கள் யாரும் தங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை. இந்த சூழ்நிலையில் டிராவிட், லட்ச்மன் போன்றோர் ஒரு நாள்,ட்வென்டி-ட்வென்டி போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு , சற்று ரிலாக்சாக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடலாம். தேவையில்லாமல் இப்படி ஒதுக்கப் படுவதையாவது தவிர்க்க்கலம்.

1 comment:

 
Watch the latest videos on YouTube.com