Friday, August 29, 2008

தமிழ் அகராதி

தமிழ் அகராதி இணைய தளங்கள் :

1. தமிழ் அகராதி

தேடும் முறை:
நீங்கள் பொருள் காண விரும்பும் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலமாகவோ இருக்கலாம். படிவத்தின் இடது புறம் காணும் தொங்கு பட்டியலில் இருந்து தேடும் சொல் எந்த வகையைச் சார்ந்தது என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இது தேடுதலை விரைவாக்கும். நீங்கள் தேட கொடுக்கும் எழுத்துக்கள் சொல்லின் தொடக்கமாக இருந்தால் சிறிய சதுரத்தைச் சொடுக்கிக் கொள்ளுங்கள். இது தேடுதலை எளிதாக்கும். தேடும் சொல்லை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தரலாம்.

2. தமிழ் ஆங்கில அகராதி பதிவிறக்கம் செய்ய
ஆங்கிலக் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்.

3. தமிழ் ஆங்கில அகராதி - 16462 சொற்கள்

தமிழ் -> ஆங்கிலம் , ஆங்கிலம் -> தமிழ் மற்றும் தமிழ் -> ஜெர்மன்,
ஜெர்மன் -> தமிழ்

4. இலவச தமிழ் அகராதி பதிவிறக்கம் செய்ய

Tuesday, August 26, 2008

Engineering Lectures from IIT's and IISc

National Program on Technology Enhanced Learning (NPTEL), a joint venture by IIT's and IISc, come up with a website with lecture videos and web courses. This site provides lectures from eminent professors in all major engineering departments.

The Video Courses are organised as PLAYLISTS under the following Categories:
1. Core Sciences
2. Civil Engineering
3. Computer Science and Engineering
4. Electrical Engineering
5. Electronics and Communication Engineering
6. Mechanical Engineering

Youtube abd Google supported NPTEL to distribute all the videos in internet. Over 2000 videos were uploaded into the net.

To get all the videos : http://www.youtube.com/iit

NPTEL website :
http://nptel.iitm.ac.in/home.php

BigDog Robo

BigDog

The Most Advanced Quadruped Robot on EarthBigDog is the alpha male of the Boston Dynamics family of robots. It is a quadruped robot that walks, runs, and climbs on rough terrain and carries heavy loads. BigDog is powered by a gasoline engine that drives a hydraulic actuation system. BigDog's legs are articulated like an animal’s, and have compliant elements that absorb shock and recycle energy from one step to the next. BigDog is the size of a large dog or small mule, measuring 1 meter long, 0.7 meters tall and 75 kg weight.
BigDog has an on-board computer that controls locomotion, servos the legs and handles a wide variety of sensors. BigDog’s control system manages the dynamics of its behavior to keep it balanced, steer, navigate, and regulate energetics as conditions vary. Sensors for locomotion include joint position, joint force, ground contact, ground load, a laser gyroscope, and a stereo vision system. Other sensors focus on the internal state of BigDog, monitoring the hydraulic pressure, oil temperature, engine temperature, rpm, battery charge and others.
In separate trials, BigDog runs at 4 mph, climbs slopes up to 35 degrees, walks across rubble, and carries a 340 lb load.BigDog is being developed by Boston Dynamics with the goal of creating robots that have rough-terrain mobility that can take them anywhere on Earth that people and animals can go. The program is funded by the Defense Advanced Research Project Agency (DARPA).

Thanks : Boston Dynamics

Tuesday, August 19, 2008

நேனோ டெக்னாலஜி

இப்போது எதற்கெடுத்தாலும் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். வாஷிங் மெஷின் வாங்கப் போனால் நேனோ டெக்னாலஜி, ஏசி வாங்கப் போனால் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். நேனோ என்றால் என்ன? அதில் என்ன சிறப்பு? இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறார்களே, உண்மையிலேயே அதில் அவ்வளவு பயன் இருக்கிறதா?
நேனோ என்பது நீளத்தை அளக்கும் ஒரு அளவு கோல். எப்படி நாம் ஊருக்கு ஊர் இருக்கும் தொலைவை கிலோ மீட்டரிலும், துணியின் நீளத்தை மீட்டரிலும், நகத்தின் தடிமனை மில்லி மீட்டரிலும் சொல்கிறோமோ, அதைப் போல மிகச் சிறிய அளவை நேனோ மீட்டரில் சொல்லலாம். ஒரு மி.மீ.இல் ஆயிரத்தில் ஒரு பங்கை, மைக்ரோ மீட்டர் அல்லத் மைக்ரான் என்று சொல்லலாம். ஒரு மைக்ரோ மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கை நேனோ மீட்டர் (நே.மீ.) என்று சொல்லலாம். நேனோ மீட்டர் அளவில் இருக்கும் பொருள்களை வைத்து செய்யும் தொழில் நுட்பத்தை சுருக்கமாக நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள்.
நேனோ மீட்டர் அளவுகளில் இருக்கும் பொருள்கள், நம் கண்ணுக்கு தெரியாது. நம் கண்களுக்கு தெரியும் ஒளியின் அலை நீளம் சுமார் 400 முதல் 700 நே.மீ. ஆகும். தற்போது அறிவியல் வழக்கில் ஒரு பொருளின் எந்த அளவாவது (நீளம், அல்லது அகலம் அல்லது தடிமன்) 100 நே.மீ.க்கு குறைந்து இருந்தால், அதை நேனோ அளவு உள்ள பொருள் (nano size material) என்று சொல்லலாம் என்று பலர் கருதுகிறார்கள். சிலர், ஒரு பொருளின் எல்லா அளவுகளுமே 10 நே.மீ.க்கு குறைவாக இருந்தால்தான் அதை நே.மீ. அளவு உள்ள பொருள் என்று சொல்லலாம் என்கிறார்கள். மார்கெட்டிங்கில் இருக்கும் மக்கள், முடிந்த வரை தங்கள் product எல்லாவற்றையுமே நேனோ என்று சொல்லத்தான் விரும்புகிறார்கள்.
நேனோ என்ற அளவானதற்கு என்ன எடுத்துக்காட்டு கொடுக்க முடியும்? நம் கண்ணுக்கு புலப்படாத பாக்டீரியா போன்ற உயிரினங்களே மைக்ரோ மீட்டர் அளவுக்கு (அதாவது நே.மீ. போல் ஆயிரம் பங்கு) இருக்கிறது. அதனால் தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்கும் அல்லது உணரும் எந்தப் பொருளுமே நேனோ மீட்டர் அளவில் இருக்காது.
ஒரு அணுவின் அளவானது சுமார் 0.1 நே.மீ. இருக்கும். பல அணுக்கள் சேர்ந்த ‘அணுக் கூட்டம்' நே.மீ. அளவு இருக்கும். சில நூறு அல்லது ஆயிரம் அணுக்கள் சேர்ந்தால்தான் அது நே.மீ.அளவு வரும். பொதுவாக காற்றில் இருக்கும் மூலக்கூறுகள் அனைத்தும் நேனோ மீட்டர் அளவில் தான் (அல்லது அதை விடக் குறைவாக) இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், உலகு எங்கும் நேனோ டெக்னாலஜி அளவில் இருக்கும் பொருள் (ஆக்சிஜன்) தான் நாம் உயிர் வாழவே உதவுகிறது. அதை நேனோ டெக்னாலஜி என்று சொல்லலாமா?
ஆனால், திடப் பொருளாக நே.மீ.அளவில் இருக்கும் பொருள்களைத்தான் நாம் நேனோ டெக்னாலஜி என்று சொல்வதில் பயன்படுத்துகிறோம். ஒரு பொருள், மிகச் சிறிய துகளாக இருக்கும் பொழுது அதன் மேல் பரப்பளவு (surface area) மிக அதிகமாகும். உதாரணமாக, ஒரு செ.மீ. அகலம் இருக்கும் ஒரு cube எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பரப்பளவு 6 சதுர செ.மீ. ஆகும். இதை நான்கு சம பாகங்களாகப் பிரித்தால்? அவற்றின் மொத்த பருமன் (total volume) அதே அளவு இருக்கும். ஆனால் பரப்பளவு அதிகமாகும். இப்படி மறுபடியும் மறுபடியும் பிரித்தால், அதன் பரப்பளவு மிக அதிகமாகும்.
இப்படி பரப்பளவு அதிகமாவதால் சில பயன்கள் உண்டு. வினை ஊக்கியாக செயல்படும் பொருள்களின் பரப்பளவு அதிகமானால், அதன் வினை ஊக்கும் திறன் அதிகரிக்கும். இந்த வகையில் நேனோ பொருளின் பயன் அதிகம்.
ஆனால், உண்மையில் நேனோ பொருளில் என்ன சிறப்பு? ஒரு அணுவானது தனியாக இருக்கும் பொழுது அதன் பண்புகள் வேறு (atomic properties). அவை கோடிக்கணக்கான அணுக்களுடன் சேர்ந்து இருக்கும் பொழுது அதன் பண்புகள் வேறு (bulk properties). இவை சில நூறு அணுக்கள் அல்லது சில ஆயிரம் அணுக்கள் இருக்கும்பொழுது அதன் பண்பு முற்றிலும் மாறியதாக (அதாவது ஒரு அணுவை போலவும் இருக்காது, கோடிக்கணக்கான அணுக்களைப் போலவும் இருக்காது) இருக்கும். அப்படி மாறி இருக்கும் பண்பு நமக்கு பயன் உள்ளதாக இருந்தால், அது நேனோ டெக்னாலஜி என்று சொல்லலாம்.
எடுத்துக் காட்டாக, தங்கம் ஒரு அணுவாக இருந்தால் அதற்கு நிறம் என்று ஒன்றும் கிடையாது. (ஆவி நிலையில் தங்கம் இருந்தால், அது கண்ணுக்கு தெரியும் ஒளியை உறிஞ்சாது). அதுவே நேனோ அளவில் இருந்தால், அது பச்சை நிறமாக இருக்கும். மி.மீ. அளவில் இருந்தால், அது ஒளியை ஊடுருவி செல்ல விடாது. இங்கு தங்கத்தின் நிறம் பச்சையாக இருந்தால் என்ன பயன்? குறிப்பாக ஒன்றும் இல்லை என்று சொன்னால், “நான் தங்கத்தை நேனோ டெக்னாலஜியில் தயாரித்து இருக்கிறேன்” என்று தண்டோரா போடுவது (உண்மை என்றாலும், வாங்குபவர்க்கு பயனற்றது என்பதால்) ஏமாற்று வேலைதான்.
சில சமயங்களில் சில உலோகங்களால் பாக்டீரியா மற்றும் பல கிருமிகள் கொல்லப்படும். சில்வர் நேனோ என்று சொல்லப்படுவது இந்த வகை. (ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் இதை ஆராய்சி செய்து ”தங்கள் சாதனத்தில் இவை பயன் தருகின்றனவா?” என்று பார்த்து சொல்கின்றனவா, இல்லை சும்மா சொல்கின்றனவா என்று தெரியவில்லை). சில்வருடன் தாமிரம் (காப்பர்) சேர்த்தால் இன்னமும் நல்லது. வெள்ளியால் சில வகை கிருமிகள் கொல்லப்படும். தாமிரத்தால் இன்னும் சில வகை கொல்லப்படும். இரண்டும் சேர்ந்தால் இந்த இரண்டு வகை தவிர மூன்றாவதாக சில கிருமிகள் கொல்லப் படும். ஏனென்றால், இந்த மூன்றாம் வகை கிருமிகளின் ‘தோலை' திறக்கும் திறன் தாமிரத்திற்கு உண்டு. ஆனால் அவற்றின் உள்ளே தாமிரத்தால் பாதிப்பு இல்லை. வெறும் தாமிரம் மட்டும் இருந்தால், தோல் பாதிக்கப் படும். பிறகு கிருமி அதை சரி செய்து கொள்ளும். வெள்ளியினால், தோலை பாதிக்கவோ ஊடுருவி செல்லவோ முடியாது. ஆனால், உள்ளே சென்று விட்டால், கிருமியை கொல்ல முடியும். தாமிரமும் வெள்ளியும் சேர்ந்து இருந்தால்தான் இந்த வகை கிருமிகளை கொல்ல முடியும்.
சில சமயங்களில் நேனோ வகைப் பொருள்கள் தயார் செய்யப் படும். ஆனால், அவற்றில் 'நேனோப் பண்புகள்' நமக்கு பயன் உள்ளதாக இருப்பதில்லை. சொல்லப்போனால் தொல்லையாகத்தான் இருக்கிறது. இந்த இடங்களில் ‘நாங்கள் நேனோ டெக்னாலஜியில் வேலை செய்கிறோம்' என்று சொல்வது விவரம் தெரியாதவர்களுக்கு தவறான கருத்தை சொல்வதாக நான் நினைக்கிறேன். எடுத்துக் காட்டாக, சிலிக்கன் சில்லு செய்யும் பொழுது, இப்போது 65 நே.மீ. மற்றும் 35 நே.மீ. அளவில் டிரான்ஸிஸ்டர்கள் செய்கிறார்கள். இதனால், டிரான்ஸிஸ்டரில் பெரிய முன்னேற்றம் இல்லை. அளவு சிறிதாக இருந்தால், ஒரு சில்லில் நிறைய டிரான்ஸிஸ்டர்கள் வைக்க முடியும். அவ்வளவே. நேனோ அளவில் இருப்பதால் இதற்கு சிறப்பு எதுவும் கிடையாது. இன்னம் சொல்லப் போனால், இவற்றை இணைக்கும் கம்பிகள் இவ்வளவு சிறிதாக செய்யும் பொழுது இவற்றின் நேனோ பண்புகளால் எதிர்பாராத பாதிப்புகள் தான் வருகின்றன.
இந்த மாதிரி கம்பெனிகள் ‘நாங்கள் நேனோ டெக்னாலஜியில் செய்கிறோம்” என்று புதிய விஷயத்தைப் போல சொல்வது எனக்கு சரி என்று படவில்லை. அது சரி என்றால், ‘நாங்கள் நேனோவை விட சிறிய அளவில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசித்து, அதைப் போலவே சிறிய அளவில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளி விடுகிறோம். இதை தினமும், தூங்கும் போது கூட செய்கிறோம்” என்று நாம் ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்ளலாம்.
நேனோ டெக்னாலஜி என்று ஒருவர் சொன்னால், “இதை நேனோவில் செய்யாமல், மைக்ரானில் செய்தால், அல்லது மி.மீ.இல் செய்தால் என்ன மாற்றம் இருக்கும்?” என்று கேளுங்கள். அந்த மாற்றம் எளிதில் கணிக்கக் கூடியது என்றால், இந்த டெக்னாலஜி ஒன்றும் பெரியது அல்ல. உதாரணமாக, நே.மீ. இருக்கும் பொருளில் பரப்பளவு அதிகமாக இருக்கும். அந்தப் பொருள் சிறிய அளவில் இருப்பதால், அதன் மொத்த அளவு குறைவாக இருக்கும். இவை இரண்டும் தவிர வேறு வித்தியாசமான, பயனுள்ள பண்பு இருந்தால்தான் அது உண்மையிலேயே நேனோ டெக்னாலஜி. இல்லாவிட்டால் வெறும் மார்கெடிங் தான். இந்த வகையில் ஏசி, வாசிங் மெஷின் இவற்றில் இருக்கும் சில்வர் நேனோ கூட உண்மையிலேயே பயன் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. இவற்றை மைக்ரான் அளவில் செய்தாலும் கிருமிகள் சாகும் என்றுதான் நினைக்கிறேன். மைக்ரான் அளவில் செய்தால் பொருள் செலவு கொஞ்சம் அதிகம், அவ்வளவே.
சில பொருள்கள், நேனோ அளவில் இருக்கும் பொழுது அவற்றிற்கு காந்தப் பண்புகள் வருகின்றன. பெரிய அளவிலிருக்கும் பொழுது காந்தப் பண்புகள் இருப்பதில்லை. இவற்றை குவாண்டம் இயற்பியல் விளக்குகிறது. இம்மாதிரி பொருள்களை நேனோ என்று சொல்வதில் தவறில்லை.
நன்றி : தா.கார்த்திக்,
பூ.சா.கோ (P.S.G) பொறியியல் கல்லூரி, கோவை.

Friday, August 15, 2008

PM's speech on 62nd Independance day

Highlights of the Prime Minister’s address on the occasion:

Agriculture:

  • Rs. 25000 crore invested in agriculture through the Rashtriya Krishi Vikas Yojana
  • Rs. 71000 crore loan waived to provide relief to debt distressed farmers
  • Bank credit for agricultural sector increased from Rs 81000 crore to Rs 225000 crore, and have reduced the interest rates for farm loans;
  • to improve the economic conditions of farmers the procurement prices for food grains steeply increased ; 50% for wheat and 30% for paddy
  • The National Food Security Mission has been set up to enhance production of rice, wheat and pulses
  • record production of foodgrains, cotton and sugar in 2007-08.

Infrastructure:

  • The second important area of development has been infrastructure development. There is a new dynamism in our railways. New roads are being built. New seaports and airports are being developed
  • The Jawaharlal Nehru National Urban Mission has been funding urban development and modernization of our cities
  • The National Rural Health Mission has been expanding public health facilities and services in rural areas

Education:

  • Government has been giving special attention to the development of education in our country
  • About 14 crore children are being provided mid-day meals under Sarva Shiksha Abhiyan scheme.
  • 6000 new high quality model schools established,373 new colleges are being opened in backward districts
  • 30 new universities, 8 new IITs, 7 new IIMs, 20 new IIITs, 5 new Indian Institutes of Science, 2 Schools of Planning and Architecture, 10 NITs, and a 1000 new polytechnics will be opened
  • Every child belonging to a family of SC, ST, OBC and all Minorities, every single child, boy or girl, must have access to modern education

Employment:

  • Providing employment is a special priority for the government
  • The National Rural Employment Guarantee Programme is aimed to soften the sharp edges of poverty
  • more investment in agriculture, manufacturing and in infrastructure needed to create more employment

Economy:

  • Economic growth is nearly 9% for last four years;India is among the world’s fastest growing economies.
  • inflation is basically due to external factors and it is double in many developing countries that in India
  • The Reserve Bank of India is moderating the growth of money supply in the country so that inflation can be controlled
  • Our economy must grow at the rate of at least ten per cent every year to get rid of poverty and generate employment for all and a basic requirement for sustained growth is availability of energy, particularly electricity

Science and Technology:

  • Our crude oil and gas reserves are limited and we must find alternative energy sources.
  • hoping to send an Indian space craft, Chandrayan, to the moon. It will be an important milestone in the development of our space programme

Governance:

  • The Right to Information Act was one major step to make Government transparent, efficient and responsive
  • The National e-Governance Plan will make it easier for all our citizens to deal with the various agencies of Government
  • increasing emoluments of government employees is one more step in making Government more efficient.

Terrorism:

  • Terrorism, extremism, communalism and fundamentalism have emerged as major challenges to the unity and integrity of our country
  • State Governments, all political parties, civil society groups and social and religious leaders to cooperate with government in rooting out terrorism from our country
  • The terrorists and those who support them are enemies of the people of India and Pakistan


Friday, August 1, 2008

சமையல் நேரம்!

இன்று ஏதாவது புதிதாய் சமைத்துப் பார்க்கலாமே என்று Sid (My name is Sudharssan and my American name is Sid. People find difficult to pronounce my name, that is why i changed... blah blah .. blah : This is how Sid's introduction would be) சமையல் இணையத் தளத்தை (உபயம் : www.arusuvai.com) புரட்டிக்கொண்டிருந்தான். நீண்ட தேடுதலுக்குப் பிறகு வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. குழம்பு செய்யத் தேவையான பொருட்களின் பட்டியலைப் பார்த்தோம். முருங்கைக்காய், கறிவேப்பிலை தவிர அனைத்தும் எங்களிடம் இருந்தது. வடகம் என்பது என்னவென்றே தெரியவில்லை. வடகம் என்ற சொல்லை மிகவும் கடினப்பட்டு படித்த Sid, அப்படிஎன்றால் என்ன என்று என்னைக் கேட்டான்.வத்தல், வடாம் போல ஏதாவது இருக்கும் என்றேன். சரி,அதை விட்டுவிட்டு இருக்கிற பொருட்களை வைத்துக் கொண்டு செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

Sid இடம் அவனது மடிக் கணினியை எடுத்துக் கொண்டு ஹால் க்கு வரச் சொன்னேன். அவன் அச்சிடப்போவதாக சொல்லி காகிதத்தை எடுத்தான். அவனிடம் elimination of waste என்ற Lean Concept ஐ சொல்லி பேப்பரில் அச்சிடப்படுவதை தடுக்க முயன்றேன். முடியவில்லை! :-)
Sid -ன் தமிழறிவின் மீது நம்பிக்கை வைத்து(!), அவனிடம் செயல் முறை இருந்த காகிதத்தை கொடுத்துவிட்டு, பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்தேன். "வெங்காயத்தையும், பூண்டையும் அம்மியில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும்" என்பதை படித்து விட்டு வெங்காயத்தையும், பூண்டையும் எடுத்து Mixy யில் போட்டு நன்றாக அரைத்து விட்டான். அவனது அரைக்கும் திறமையை பற்றி வேறு என்னிடம் சிலாகித்துக்கொண்டன். பின்னர் படித்து விளக்கினேன். தமிழ்க்கொலையை தடுக்க எண்ணி அவனிடமிருந்த காகிதத்தை பிடுங்கிக்கொண்டு நான் Instruction கொடுக்க ஆரம்பித்தேன். அப்போது அங்கு வந்த நட்டு என்ற நடராஜனிடம் அம்மியைப் பற்றிய பேச்சுத் தொடர்ந்தது. Sid அவனது பாட்டி காலத்திலேயே (!) அம்மி வழக்கொழிந்து விட்டதாகச் சொன்னான். நட்டு, அவனது வீட்டில் பத்து வருடங்களுக்கு முன்பு வரை இருந்ததையும், நான் எனது வீட்டில் இன்றும் புழக்கத்தில் இருப்பதையும் பற்றிச் சொன்னோம். Sid -ஐ பொறுத்தவரை அம்மிக்கல்,ஆட்டுக்கல், வெண்கல பானை போன்றவை எல்லாம் அருங்காட்சிப் பொருட்களே!!!




Sid சமையல் நன்றாகச் செய்வன். ஆனால்....இந்த உப்பு, புளி, காரம் எவ்வளவு போடவேண்டும் என்பது மட்டும் அவனுக்கு ஒரு புரியாத புதிர். யாராவது சொல்லவேண்டும், இல்லை, செய்ய வேண்டும். ஒருவழியாக குழம்பு செய்து முடித்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்தோம். Sid அவனது வீட்டுச் சமையலைப் பற்றி அசைபோடத் தொடங்கினான். தினமும் ஒரு குழம்பு, ஒரு கறி அவ்வபோது பஜ்ஜி போன்றவற்றை உட்கார்ந்த இடத்திலிருந்தே சாப்பிட்டு வந்ததை நினைவு கூர்ந்தான்.ஹும் ...என்ன செய்ய?



சிக்கன் விருந்தை ஒரு கட்டு கட்டிவிட்டு வந்த ஹேமந்த் சுவைத்து பார்த்துவிட்டு நன்றாக வந்திருப்பதாக சொன்னான். Sid முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது. நன்றாக இல்லை என்றால் என்னை கை காட்டிவிடுவான். இரண்டுமணி நேர போராட்டத்திற்குப் பிறகு இந்த குழம்பை ருசிக்க முடிந்தது.



இரண்டு வருடங்களில் Master of Science என்ற பட்டத்தை Industrial Engineering -ல் வாங்குகிரோமோ இல்லையோ, Master in Samayal கண்டிப்பாக ஆகிவிடுவோம்.
 
Watch the latest videos on YouTube.com