Tuesday, March 31, 2009

விஜய டி.ராஜேந்தரின் முழு நீள நகைச்சுவை

விஜய டி.ராஜேந்தரின் முழு நீள நகைச்சுவை நிகழ்ச்சி - உங்கள் 'குரல்' டீவியில்.


Monday, March 30, 2009

மறக்க முடியுமா : நாகேஷ்

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில்பிறந்தவர்.தமிழ்நாடு,தாராபுரம் பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில்பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில்அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர்நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும்அழைக்கப்பட்டார்.தாராபுரத்தில் தனது எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்துக் கொண்டு கோவைபிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின.

நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார். 1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார். K. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.நீ‌ர்‌க்கு‌மி‌ழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார். மைக்கேல் மதன காமராஜன்,மகளிர் மட்டும், அவ்வை சண்முகி,பஞ்சதந்திரம் போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப் படம் நாகேஷ் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும், இதுவும் கமலஹாசன் படமாகும்.

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களைப் பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு.

நன்றி : விக்கிபீடியா, TubeTamil

Sunday, March 29, 2009

சீனர்களின் துப்பறியும் மென்பொருள் : கோஷ்நெட்


வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் அனைவரும் ஒருமுறையாவது 'வைரசினால்' பதிக்கப் பட்டிருப்பார்கள். அதிலும் ட்ரோஜன் (Trojan) எனப்படும் மால்வேரினால் (Malware) அவஸ்தையை அனுபவித்திருப்பார்கள். பெரும்பாலும் எதாவது ஒரு இணைய தலத்தில் நுழையும் போதோ அல்லது எதாவது லிங்கை சொடுக்கும் போதோ வைரஸ் எனப்படும் மென்பொருட்களை 
தெரியாமல் தரவிறக்கம் செய்து விடுகிறார்கள். Registry யில் உட்கார்ந்து கொண்டு பாடாய் படுத்திவிடும்.சரி, இந்த மாதிரி வைரசை பரப்புவதினால் என்ன லாபம்? சும்மா கடுப்பேத்த இருக்கலாம்.சாதரண Malware கள் வலுக்கட்டயமாக விளம்பரங்களை நம் மீது தினிப்பதொடு நிறுத்திக் கொள்கின்றன. சில ட்ரோஜன் உங்கள் கணினியில் உள்ள தகவல்களை எல்லாம் திருடிக் கொண்டு போகலாம். கிரெடிட் கார்டு எண்கள், வங்கிக் கணக்குகள், சில முக்கிய கடவு சொற்கள் களவு போகலாம். 

 ஆனால், இதையெல்லாம் விட சில ஆபத்தான வேலைகளை செய்ய இது பண்யன்படுதப் படுகிறது. முக்கிய நாடுகளில் உள்ள அரசு அலுவலகங்களின் இணைய தளத்திற்கு சென்று கோப்புகளை திருடவும், மாற்றவும் ஒரு 'உளவாளியாக' (Cyber-espionage) இந்த ட்ரோஜன் அனுப்பப்படுகிறது. இதை சிரத்தையாக செய்துக் கொண்டிருப்பது வெறும் யாரும் இல்லை - நமது அண்டை நாடான  சீனாதான். சமீபத்தில் இணையதள உளவு  பற்றிய ஒரு ஆய்வில் 103 நாடுகளை சேர்ந்த 1295 கணினிகள் உளவுப் பார்க்கப் பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் பதிக்கப் பட்டியலில் முக்கியமாக தலாய் லாமாவின் அலுவலகம், திபெத் அரசாங்க அலுவலகங்கள், அமெரிக்காவில் உள்ள இந்தியன் எம்பசி, நட்டோவின் (NATO) தலைமை அலுவலகம் ஆகியவை அடங்கும். 

சைனாவிலிருந்து அனுப்பப்படும் இந்த வைரசுக்களுக்கு "கோஷ்நெட்" (GhostNet) என்று பெயர் வைத்துள்ளனர்.கோப்புகலை திருடுவதொடில்லாமல் , அந்த கணினியில் இருக்கும் புகைப்படக் கருவியையும்,  ஒலிக் கருவிகளையும் தானாக இயக்க செய்து அதன் மூலம்  உளவு பார்க்கும் வேலையும் நடந்து வருகிறது. இது மாதிரி வேலைகளை எல்லாம் அமெரிக்காவிம் CIA , ரஷ்யவும் தான் செய்து வந்தது. இப்போது இவர்களை எல்லாம் விஞ்சி விடுவது போல சீனா தன் வேலையே ஆரம்பித்துள்ளது. இதை வழக்கம் போல் சீன அரசாங்கம்  மறுத்துள்ளது. 

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட கனடாவில் உள்ள University of Toronto  இதை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அவர்கள் கூற்றுப்படி உளவு பார்க்கப்பட்ட கணினிகளில் முப்பது சதவிகிதம் மிக முக்கியமான கோப்புகளை கொண்டிருந்தது.இந்த கணினிகளில் கோஷ் ராட் (gh0st RAT) என்னும் ட்ரோஜனை தரவிறக்கம் செய்து , அந்த கணினிகளை தான் கட்டுப் பட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். அப்பறம் கோப்புகளை திருடுவதில் இருந்து ஆரம்பித்து மற்ற எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறார்கள். இதை ஆய்வு செய்த வல்லுனர்கள் மிகவும் சிக்கலான முறையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் , கண்டுபிடித்து அழிப்பது கடினமான வேலை எண்டும் தெரிவித்துள்ளனர். இந்த இணைய தல கிருமிகளை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்க வில்லை என்றல் , பாதுகாப்பிலாத இணையம் கொடிய அரக்கனாக மாறிவிடும்!

முழு அறிக்கையை இங்கே தரவிறக்கம் செய்யவும். 

ஆதாரம்: http://webapp.mcis.utoronto.ca/ 

Saturday, March 28, 2009

சில அரிய புகைப்படங்கள்!


தான் வேட்டையாடிய சிறுத்தையின் மீது அமர்ந்திருக்கும் ஒரு இந்திய மகராஜாவின் மகள்! (1920இல்)

கல்கத்தா, காபூலை இணைக்கும் கிராண்ட் த்ரந்க்(Grand Trunk) சாலை. Sher Shah Suri ஆல் கட்டப்பட்ட இந்த சாலை வியாபார முக்கியத்துவம் வாய்ந்தது.

வைஷ்ணவர்கள் என்று அழைக்கப்படும் பிரிவினர்


பிரிட்டிஷ் வானூர்தி 'ஹன்னோ' இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு கடிதங்களை எடுத்து செல்கிறது.

ஆடை அலங்காரத்துடன் நாட்டியமாடும் பெண்கள்


அரிய காட்சி!! ஜனாதிபதியின் அரண்மனை(!) மற்றும் பாராளுமன்டத்தின் Areial View

பம்பாயில் ஒரு 'பார்டியில்' கலந்து கொள்ள வந்திருக்கும் மகளிர் (1910)


ஆங்கிலேயனுக்கு இந்தியர் ஒருவர் மசாஜ் செய்யும் காட்சி


ஜம்மா மசூதி - டெல்லி (built between 1650 and 1658)


Wednesday, March 25, 2009

பட்டதிலிருந்து மின்சாரம்!


னேகமாக நாம் எல்லோரும் ஒருமுறையாவது பட்டம் விட்டு மகிழ்ந்திருப்போம். அல்லது பட்டம் விடுவதை அருகில் இருந்தாவது பார்த்திருப்போம். மேமாத விடுமுறை வந்துவிட்டால் வண்ண வண்ண பட்டங்கள் வானில் பறப்பதை பார்க்கலாம். ஈர் குச்சி என அழைக்கப்படும், மெல்லிய , வளையக்கூடிய கொச்சியை எடுத்துக் கொண்டு அதை வளைத்து, கலர் காகிதங்களால் அலங்கரித்து, அதற்கு வால் ஒன்று இணைத்து...இப்படி அதை தயார் செய்வதே ஒரு பெரிய கலை தான். அப்பறம் நூலில் கட்டி இணைத்து, உயர உயர பறக்க விட்டு, யார் பட்டம் அதிக உயரம் பறக்கிறது என்று போட்டிபோடுவதும் ஒரு சுகம் தான்...ஓகே மேட்டருக்கு வருவோம்...

இந்த பட்டதை வைத்து மின் ஆற்றலை உருவாக்க முடியும் என்று கண்டுப் பிடித்துள்ளனர். காற்றில் உள்ள ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது புதிதல்ல. காற்றாலை கொண்டு மின்சாரம் தயாரிக்கப் பட்டு வருகிறது. காற்றின் விசையால் உந்தப்பட்டு பட்டம் மேலே பறக்கும் போது, அதன் மறு முனையில் உருவாகும் ஆற்றலை வைத்து மின்சாரம் தயாரிக்க படுகிறது. நாம் பட்டம் விடும் பொழுது இதை உணர்ந்திருப்போம். நம் பட்டம் மிக உயரமாக பறக்கும் பொது, நம்மை அது இழுத்து செல்லும். பத்து மீட்டர் சுற்றளவுள்ள பட்டதை வைத்துக்கொண்டு பத்து கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் அது பத்து வீடுகளின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கணக் கிட்டுள்ளனர் நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். மிக உயரத்தில் பறக்க விட்டு , அதிக பட்சமாக நூறு மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இதனால் சுமார் ஒரு லட்சம் வீடுகளின் மின்சார தேவை பூர்த்தி செய்ய படும். இப்படி தயாரிக்கப்படும் மின்சாரத்தின் செலவு மிகக் குறைவு. இதனால் ஆராய்ச்சிகள் மும்முரமாக நடைப் பெற்று வருகிறது. அமெரிக்காவில் சால் கிரிபித் என்பவர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரது சொந்த நிறுவனமான மகனி பவர் மிகபெரிய் அளவில் மின்சாரத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கூகிள் கூட சுமார் பத்து மில்லியன் டாலர்களை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

இந்த வீடியோவை பாருங்க: புரியும்.

Saturday, March 21, 2009

டிராவிட் நீக்கம்: பீட்டர்சன் புதிய கேப்டன்


மல்லையாவின் பெங்களுரு ராயல் சாலேன்ஜர் அணிக்கு பதிய கேப்டனாக கெவின் பீட்டர்சன் நியமிக்கப் பட்டுள்ளார். மே மாத தொடக்கத்திலிருந்து கல்லிஸ் காப்டனாக தொடருவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக டிராவிட் விளையாட முடியாததால் தான் அவர் கேப்டன் பொறுப்பில் தொடர முடியவில்லை, அதனால் தான் இந்த மற்றம் என்று சொல்லப் படுகிறது. காரணம் என்னவாகவோ இருந்துவிட்டு போகிறது...ஆனால் டிராவிட் , லக்ஸ்மன் போன்றோர் இந்த ட்வென்டி - ட்வென்டி போட்டிகளுக்க்கெல்லாம் ஒத்துவர மாட்டர்கள். ஏற்கனவே இந்த இருவரும் ஒரு நாள் போட்டிகளில் சேர்க்க படுவதில்லை. 

கிரிக்கெட் மிக வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. அதுவும் இந்த ட்வென்டி-ட்வென்டி வருகைக்கு பின் , வீரர்களில் ஆட்ட முறையில் பல மாற்றாங்கள். ஒரு ஓவருக்கு ஒரு பவுண்டரி இல்ல சிக்ஸ் அடிக்கலான, என்னடா போர் அடிக்குது மேட்ச் சொல்ல தோனுது. இந்த வேகமான ஆட்ட முறைக்கு ஜயசூரியவை தவிர மற்ற சீனியர் வீரர்கள் யாரும் தங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை. இந்த சூழ்நிலையில் டிராவிட், லட்ச்மன் போன்றோர் ஒரு நாள்,ட்வென்டி-ட்வென்டி போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு , சற்று ரிலாக்சாக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடலாம். தேவையில்லாமல் இப்படி ஒதுக்கப் படுவதையாவது தவிர்க்க்கலம்.

Wednesday, March 18, 2009

என்ன செய்யப்போகிறோம் நண்பர்களே!

செவிவழிச் செய்தி ஒன்று உண்டு. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, சாதிவாரியான இட ஒதுக்கீடு பற்றி விவாதிக்க, சாதித் தலைவர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டினாராம். அனைத்துச் சாதித் தலைவர்களும் தமது சமூக மக்களின் மொத்த எண்ணிக்கையைச் சொல்ல, கூட்டிப் பார்த்தபோது தமிழ்நாட்டு மக்கள்தொகை 20 கோடியாகத் தெரிந்ததாம். அவருக்கே சந்தேகம் வந்திருக்க வேண்டும், தான் தமிழ்நாட்டுக்கு மட்டும் முதலமைச்சரா அல்லது விந்திய மலைக்குத் தெற்கே உள்ள மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், கூர்க்கம், தமிழகம், கேரளம் உள்ளடக்கிய பஞ்ச திராவிட நாட்டின் முதலமைச்சரா என.

சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவில் 1881-ல் நடைபெற்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் 1931-ல்! அவை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில். சுதந்திர இந்தியாவில் அத்தகைய கணக்கெடுப்பு 1981-ல் நடந்திருக்க வேண்டும். ஆனால், அன்றைய மத்திய அமைச்சரவை, அத்தகைய கணக்கெடுப்பு, இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனக் கருதி, அந்த நடைமுறையை ஒழித்துக்கட்டியது.சாதி ஒழிப்பில் தீவிரமாக இருந்த மத்திய - மாநில அரசுகள், சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மக்கள் மத்தியில் பிரிவினையை வளர்க்கும் என்றும், சமத்துவத்தைக் கெடுக்கும் என்றும் கருதி, அதை ஊக்குவிக்கவில்லை. மனித மனங்களில் இருந்து சாதியை வேரோடும் வேரடி மண்ணோடும் பறித்து எறிந்துவிட வேண்டும் என்று கருதிய தன்னலமற்ற, நேர்மையான, மதம், மொழி, இனப் பாகுபாடுகளைக் கடந்த, பாரத சமுதாயத்தைச் சமைத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட தேசத் தலைவர்களின் நிலைப்பாட்டையும் நாம் கேள்வி கேட்பதற்கு இல்லை.

கிராமத்தில் ஒருவனுக்குத் தென்னை மரங்களை முறித்து வண்டியில் ஏற்றி, பக்கத்து ஊரில் இருக்கும் செங்கல் சூளைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தென்னை மரத்தில் ஏறி முதலில் கொண்டையைத் தறித்து, பின்பு மேல் மரம், நடு மரம், அடி மரம் எனத் தறித்து, வண்டியில் அடுக்கிப் பாரமேற்றுவதுதான் முறை. எதற்கு அந்தப்பாடு என யோசித்தவன், இரட்டைக் காளைகள் பூட்டிய பாரவண்டியை மரத்தின் தூரை ஒட்டி நிறுத்திவைத்து, மரத்தை மூட்டில் இருந்து வெட்ட ஆரம்பித்தான். மரம் முறிந்து விழுந்து, வண்டி உடைந்து நொறுங்கி, காளைகளும் செத்துப்போயின. நின்று யோசித்தவன் சொன்னான் - 'புத்தி மெத்த புத்தி, மாடு வண்டி சாடு சப்பண்டி' என்று. திரண்ட கருத்தாவது... 'செய்தது சரிதான். ஆனால், வண்டியும் மாடுகளும் பலமும் திறனும் அற்றவை' என்பது.

அதுபோல் ஆகிவிட்டது, நம் நாட்டில் சாதி ஒழிப்பின் கதை. ஒதுக்கீட்டுச் சட்டங்கள், கல்வி, உயர் கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு யாவற்றுக்குமான பிரிவினை, சாதி அடிப்படையில் அமைந்தன. சாதி பற்றிய தகவல்களைக் கோராத அரசுப் படிவங்கள் இல்லை. தாலுக்கா அலுவல கங்கள், மெய்யாகவும் பொய்யாகவும் சாதிச் சான்றிதழ்கள் வழங்குவது என ஆயிற்று. தமது ரொட்டியில் எந்தப் பக்கம் வெண்ணெய் எனக் கண்ட சகல சாதியினரும் தமது சாதியைப் பிற்பட்டதாக, மிகவும் பிற்பட்டதாக, தாழ்த்தப்பட்டதாக, மிகவும் தாழ்த்தப்பட்டதாக அறிவிக்கக் கோரும் கோரிக்கைகள் வலுத்தன. சமூக அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் ஊசலாடியவர் பங்குகளை நகரத்துத் தந்திரசாலிகள் அபகரித்துக்கொள்ள ஆரம் பித்தனர். வாக்குப் பொறுக்கும் அரசியல் தலைமைகள் சாதி பிரித்து வேட்பாளர்களை நிறுத்தின. சாதித் தலைவர்கள் உருவாகி, அரசியல் தலைமையுடன் தரகு செய்ய ஆரம்பித்தனர். சாதித் தலைவர்கள் அரசி யல் தலைவர்களாக மாறினர்; சாதிச் சங்கங் கள் அரசியல் கட்சிகளாக உருமாறின.இது இந்திய சமுதாயம் மத, இன, சாதிப் பாகுபாடுகள் துறந்து மறுமலர்ச்சி பெற முயன்றதன் சோக வரலாறு.

முன்பு, தியாகராஜ பாகவதர் சினிமாவில் புகழ்பெற்றிருந்த காலத்தில், அவரது சமூகத் தினர் பாகவதர் கிராப் வைக்கவும், 'சொப் பன வாழ்வினில்' என்று பாடித் திரியவும் ஆரம்பித்தனர். மாண்புமிகு ஜெயில்சிங் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆன போது, தமிழ்நாடு எங்கும் விஸ்வ கர்மா சமூகத்தினர் சுவரொட்டிகள் ஒட்டினர். சமீப காலமாக வேளாளர் மாநாடு எனில் கப்பலோட்டிய தமிழன் படத் தையும், நாடார் மகாஜன சங்க ஊர் வலம் எனில் கர்மவீரர் படத்தையும், முக்குலத்தோர் பேரணி எனில் தேச விடுதலைத் தியாகி பசும்பொன் தேவர் படத்தையும், தலித் எழுச்சி மாநாடு எனில் சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர் படத்தையும் தாங்கிக் கோஷமிட்டுச் செல்வதைக் காண்கி றோம்.

மேதைகள், தியாகிகள், அரசியல் ஞானிகள், சமூகப் போராளிகள் என்பவர் அவர்தம் சாதித் தலைவர்களாக மட்டும் அடையாளம் காட்டப்படுவது, முன்னிறுத்தப்படுவது, சமகால இந்திய அரசியல் சூழலின் வீழ்ச்சி. மகாத்மா காந்தியைப் பனியா எனக் காண்பதைப் போல! தமிழ் ஈழ விடுதலைக்காகத் தனது உடல் எரித்து உயிர் துறந்த இளைய தோழனின் அஞ்சலிக்காக, கோவை மாநகரில் கறுப்பு மையில், கண்ணீர்த் துளிகளுடன் சுவரொட்டிகள் காணப்பட்டன. சுவரொட்டி வாசகத்தை, அதன் இலக்கணப் பிழைகளுடன் அவ்வாறே தருகிறேன்.

'அன்று தமிழ்மொழி போராட்டத்தில் உயிர் நீத்த தாளமுத்துவே- இன்று தமிழ் இனத்துக்காக உயிர் நீத்த முத்துக்குமரனே - என்றும் எப்போதும் தேசப் பற்றுக்காக முதல் இடத்தில் இருக்கும் நாடார் குல முத்துக்களே!' சுவரொட்டியை வாசிக்கும்போது, எனக்கு எதிர்கால இந்தியாவை எண்ண அச்சமாக இருந்தது. சாதியை ஒழிக்க, கலப்பு மணங்கள் ஊக்கு விக்கப்பட்டன. மத அடையாளங்களைத் துறக்க அறிவுறுத்தப்பட்டோம். நாமம் தரித்த நெற்றியை நக்கி அழித்தவர் உண்டு. நாமம் மறைவிடத்தில் இருந்தால் என்ன செய்வீர் எனக் கேட்டவர் உண்டு. சாலைகளின், பள்ளிகளின், அறநிலைகளின், நினைவாலயங்களின் சாதி ஒட்டுகள் அழிக்கப்பட்டன. ராஜகோபா லாச்சாரியார் ராஜாஜி ஆனார். ம.பொ.சிவ ஞானக் கிராமணியார், ம.பொ.சி ஆனார். வ.உ.சிதம்பரம் பிள்ளை, வ.உ.சி ஆனார். காமராஜ நாடார், காமராஜ் ஆனார்.

பிற மாநில தேசத் தலைவர்கள் கோஷ், தாஸ், முன்ஷி, யாதவ், ஜாதவ், சிங், ரெட்டி, ஷெட்டி, மேனன், நாயர், பாட்டீல் எவரும் எங்கும் சாதி ஒட்டுக்களைத் துறவாததை நாம் பொருட்படுத்தவும் இல்லை.பள்ளிச் சான்றிதழ்களில் சுப்ரமணியப் பிள்ளையாக இருந்த நான் தன்னிச்சையாக சுப்ரமணியம் ஆனேன். 20 ஆண்டுகள் முன்பு, சாதிச் சான்றிதழ் பெற வட்டாட்சியர் அலுவலகங்கள் முற்றுகை இடப்பட்டன. எனது பக்கத்து ஊர்க்காரன், கல்லூரியில் வகுப்புத் தோழன், ஒரே டெஸ்க்கில் இருந்தவன், கோவையில் தாசில்தாராக இருந்தான். என்னிடம் சொன்னான், ''மக்கா, ஒரு நாளைக்கு ஆபீஸூக்கு வா! நான் உன்னை MBC பிள்ளைமாரா ஆக்கிடுறேன்.'' எனக்குத் தெரிந்து, அன்று வெள்ளாளரில் 66 வகையினர் இருந்தனர். இன்று அது குட்டி போட்டுப் பெருகி இருக்கவும் கூடும். அவர்தம்முள் OC, BC, MBC எனப் பிரிவுகள் இருந்தன. பலரும் சில ஆயிரங்களில் இனமாற்றம் பெற்றும் இருந்தனர். எனது நண்பனின் புத்திமதியை, எனது பிள்ளைகளின் நலம் மறுத்து, ஆங்காரமாக நான் புறக்கணித்தேன். நோக்கம் எனது உயர்நிலை மேன்மையைக் காப்பாற்ற அல்ல, அடுத்தவன் உரிமையை அபகரிக்கலாகாது என்பதால். ஆனால், அப்படி அபகரித்தவன் கெட்டிக்காரன்.

எனது மாவட்டத்து வேளாளப் பேரவை, மாநில அமைச் சர்கள் சந்நிதானத்தில் எனக்கு ஒரு பரிசளித்துச் சிறப்புச் செய்ய அழைத்தபோதும், 'என்னால் வரவும் பெறவும் இயலாது' என்று கடிதம் எழுதினேன். இருந்தும்கூட, எனது 'ஊதுபத்தி' கதையை மேற்கோள் காட்டி, நாஞ்சில் நாடன் தனது சாதி வெறியை மீண்டும் நிரூபிக்கிறார் என்று எழுதிய மத, இன, சாதி அடையாளங்கள் துறந்த, மாசுமருவற்ற முற்போக்குத் திறனாய்வாளர் உண்டு. அந்தக் கதை அடங்கிய 'பேய்க்கொட்டு' எனும் எனது தொகுப்பு, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்குப் பாடமானபோது, துணைவேந்தருக்கும் கல்வி அமைச்சருக்கும் மனுக் கொடுத்தவர் உண்டு. உண்மை எனது நெஞ்சறியும், எனவே, ஈதொன்றும் எனக்குப் பொருட்டல்ல.

ஆனால், மேடைக்கு ஒன்றும் சுயத்துக்கு ஒன்றுமாக வாழும் இன்றைய அரசியல் கலை, இலக்கிய, பண்பாட்டுத் தலைமைகளின் சாதி வெறி நமக்குக் கவலை அளிக்கிறது. சாதி துறந்து இங்கு அரசியல் நடத்த வாய்ப்பே இல்லை என்பது யாவரும் அறிந்ததுதான். அரசியல் என்பது தொண்டோ, ஊழியமோ, தியாகமோ அல்ல! அது ஒரு தொழில், வியாபாரம். சிறு வழிப்பறி முதல் பெருங்கொள்ளை வரையிலான சமூக நீதி. எனவே, சகலச் சாதிகளும் தத்தம் அழுக்குப் படிந்த நகங்களையும், காரை அடைத்த பற்களை யும் கூராக்கி வைத்துக்கொள்ள முயற்சி செய்கின்றன.

எதிர்காலத்தில் சாதிவாரியான மக்கள்தொகை அடிப்படையில் சட்டமன்றப் பிரதிநிதித்துவங்கள் கோரப்படக்கூடும். அமைச்சர்கள், அதிகமாகத் தேனும் நெய்யும் ஒழுகும் இலா காக்கள் வேண்டப்படும். சாதி விகிதாசார அடிப்படையில் உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், மாவட்டக் காவல் துறை அதிகாரிகள், ஆட்சியர், காவல் ஆணையர், கண்காணிப்பாளர்கள் எண்ணிக்கை அமைய வேண்டும் என்று வற்புறுத்தப் படலாம்.இல்லாவிட்டால், பயணிகளை வைத்துக்கொண்டே பேருந்துகள் கொளுத்தப்படலாம். அமைச்சுகள், வாரியங்கள் என பங்கு கேட்கலாம். பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறைதான் வேண்டும் என அடம்பிடிக்கலாம். அதற்கும் முன்மாதிரிகள் உண்டு நமது அரசியலில்.

இன்று வெறும் ஒரு லட்சத்துப் பன்னிரண்டாயிரம் மக்கள் தொகை கொண்ட இனம் ஒன்று மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என அநியாயமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இனமாக இருக்கிறது எனும் குற்றச்சாட்டு வரலாம். இரண்டு சதவிகிதம் மக்கள்தொகை கொண்ட பிரிவு, நியாயமாகத் தமக்கு ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருக்க வேண்டும்; ஆனால், எவர் புண்ணியத்தாலோ ஒருவர் மட்டுமே இருக்கிறோம் எனக் கறட்டு வழக்குப் பிடிக்கலாம். வங்கி மேலாளர்கள், சுங்க வரி, கலால் வரி, வருமான வரி அதிகாரிகளில் விகிதாசாரம் கோரலாம். சினிமா நாயக-நாயகியர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளரில் சாதிகள் பங்கு கேட்கலாம். எமது இனத்து மக்கள்தொகை கணக்குப்படி, ஒரு திரைப்படத்தில் எமக்கு மூன்று கற்பழிப்புக் காட்சிகள் வேண்டும் எனலாம்.

ஐந்து சதவிகிதம், பத்து சதவிகித ஜனத்தொகைச் சாதிகள் தமது பங்குகளைச் சுமந்து கைவீசி, தெம்மாங்கு பாடி வழி நடப்பார்கள். ஆனால், இந்த மண்ணில் வெறும் 300 பேர் முதல் 30,000 பேர் வரை மக்கள்தொகை கொண்ட எண்ணற்ற சாதிகள் உண்டு. அவர்கள் தமது வாழ்க்கைப் போரை நகங்களற்றும் பற்களற்றும் எங்ஙனம் நடத்த இயலும்?

இன்றும் தாழ்த்தப்பட்டவருக்கு முடி வெட்ட மறுக்கும் கிராமங்கள் உண்டு. மாட்டு வண்டியில் போனால், வண்டி ஓட்டுகிற தலித் இறங்கி நடந்து சாதி இந்துக்களின் தெருக்களைக் கடக்கும் கிராமங்கள் உண்டு. சாயாக் கடைகளில் தனிக் குவளைகள் உண்டு. கோட்டைப்புரங்கள் உண்டு. ஆதிக்கச் சாதி எதுவெனக் கண்டு, தேர்ந்து, உசிதம் போலக் கட்டுரைகள் எழுதும் அறிவுஜீவிகள் உண்டு.

வாக்குக் கொள்ளையையும், தேர்தல் வெற்றியை யும், அதிகாரத்தையும், அதன் மூலம் ஆயிரக்கணக்கில் கோடிகளையும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் குறிவைத்துத் திரும்பி நிற்கிறபோது, சாதி அமைப்பு கள், பதவி எனும் குருதி வாசனையில் நாவூறி, தமது அரசியல் பங்குகளைப் பறித்துக்கொள்ள அணி திரள்கின்றன. ஏற்கெனவே இங்கு ஜனநாயகம் என்பது பணநாயகம். இனி அது பண - இன நாயக மாகப் பரிணமிக்கும்.

இவ்விதச் சாதிச் சண்டைகளில் ஆள் பலமும், பண பலமும், அரசியல் பலமும் இல்லாத பல நூறு எளிய சாதிகள், எப்போதும் போல உண்டு கொழுத்து மகிழ்ந்தவர் வீசும் எச்சில் இலைகளுக்காகக் காத்துக்கிடக்கும். அவர்களுக்குத் தொண்டூழியம் செய்ய எந்தக் கந்தர்வனும் மண்ணில் கால் பாவாமல் நடந்து வர மாட்டான்.

மக்களைத் தம்முள் பிரித்து ஆளும் சூழ்ச்சியின் சுழற்காற்று மையத்தில் நாடு சகல திசைகளிலும் இழுபட்டுக்கொண்டு இருக்கிறது. ராமலிங்க வள்ளலின், மகாத்மா காந்தியின், தாதா சாகேப் அம்பேத்கரின், மகாத்மா ஃபுலேயின், பாபா ஆம்தே யின், பெரியாரின் நோக்கங்களுக்கு எதிர் திசையிலான பயணத்தை நாம் தொடங்கியாயிற்று. திரும்புதல் என்பதும் சமீபத்தில் சாத்தியம் இல்லை.

தன் படை வெட்டிச் சாதலும், சாதிகளுக்கு இடையேயான ரத்தப் பெருக்கும் அடிவானில் விஷ மேகமாகப் பொழியத் திரண்டுகொண்டு இருப்பதை கண்ணுள்ளோர் காணலாம். அதிலிருந்து தப்பிக்க நோவாவின் கப்பல் வருமா என்று தெரியவில்லை. ஏற்கெனவே விவிலியத்தில் எச்சரிக்கை வாசகம் ஒன்று உண்டு - 'God sent nova the rainbow sign. No more water, the fire next time!'

என்ன செய்யப்போகிறோம் நண்பர்களே!

- நாஞ்சில் நாடன்

நன்றி : விகடன்

 

Sunday, March 15, 2009

வினாத்தாள் குழப்பம் - பாதிக்கப்படும் மாணவர்கள்

செய்தி:  பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த வேதியியல் தேர்வில், இரண்டு கேள்விகள் குளறுபடியாக இடம் பெற்றிருந்தன. ஐந்து மதிப்பெண் கேள்வி ஒன்றும், ஒரு மதிப்பெண் கேள்வி ஒன்றும் தவறாகக் கேட்கப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வேதியியல் தேர்வில் பகுதி-4ல் ஏழு கேள்விகள் தரப்பட்டு, அதில் நான்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு கேள்விக்கும் 10 மதிப்பெண். இந்த மதிப்பெண், ஐந்து ஐந்தாகப் பிரித்து (உட்பிரிவு கேள்விகள்) தரப்பட்டன.உட்பிரிவில், -பி-சி-டி என்று நான்கு கேள்விகள் தரப்பட்டு, அதில் "-பி,' அல்லது "சி-டி' என தேர்வு செய்து இரண்டு கேள்விகளுக்கு விடை அளித்தால், 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில், கேள்வி எண் 70 ()வில் இடம் பெற்றிருந்த கேள்வி (கட்டாய வினா) தவறானது என்று மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்தனர்.

இது குறித்து, வேதியியல் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கேள்வி: சி4 எச்10-0 என்ற மூலப்பொருள் வாய்ப்பாடு கொண்ட இரு மாற்றியங்கள் மற்றும் .பி. 573 கே வெப்பநிலையில் தாமிரத்துடன் தனித்தனியே வெப்பப்படுத்தும் போது, "'ஆனது சி-4எச் 8 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு உடைய ஆல்கீன் சேர்மம் "சி'யைத் தருகிறது. "பி' ஆனது சி4 எச் 8 0 என்ற சேர்மம், "டி'யைக் கொடுக்கின்றன. சேர்மம் "டி' டாலன்ட் கரணியை ஒடுக்குவதில்லை. ஆனால், அயோபார்ம் வினைக்கு உட்படுகிறது. .பி.சி மற்றும் "டி'யை கண்டுபிடித்து வினைகளைத் தருக.இதில், "' சேர்மத்தில் இருந்து "சி' சேர்மத்திற்கு உண்டான வினையானது புத்தகத்தில் இருக்கிறது. ஆனால், "பி' சேர்மத்தில் இருந்து "டி'க்கு உண்டான வினை பாடப் புத்தகத்தில் இல்லை. அதனால், பெரும்பாலான மாணவர்கள் இந்த கேள்விக்கு விடை எழுதவில்லை. இவ்வாறு ஆசிரியர் கூறினார்; மாணவர்களும் அதையே தெரிவித்தனர்.

பாடப் புத்தகத்தில் இல்லாத கேள்வியைக் கேட்டதால், அதற்குரிய ஐந்து மதிப்பெண்களையும் தேர்வுத் துறை வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். மற்றொரு குளறுபடி கேள்வி: கொள்குறி வகை வினா பகுதியில் (ஒரு மதிப்பெண்) கேள்வி எண் 3ல், "கீழ்கண்டவற்றுள் எது கதிரியக்க லேன்ப்பனைடு?' என்று கேட்கப்பட்டுள்ளது. இதற்கு, -Pu, பி-Ac, சி-Dh, டி-Pr என்று நான்கு விடைகள் தரப்பட்டுள்ளன. இதில், சரியான விடையை தேர்வு செய்து குறிப்பிட வேண்டும். முதல் மூன்று விடைகளும் தவறானவை. நான்காவது விடை சரி. ஆனால், "கட்' என்பதற்கு பதிலாக, "Pr' என்று தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த கேள்விக்குரிய மதிப்பெண்ணும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மிக முக்கியமான தேர்வில் குளறுபடியான கேள்விகள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேள்வித்தாள் தயாரித்தவர்கள் செய்த தவறுகளுக்கு, மாணவர்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று ஆசிரியர்களும் குமுறுகின்றனர். அறிவியல் பாடங்களில் 1 மதிப்பெண் குறைந்தால் கூட, தொழிற்கல்வி சேர்க்கையில் மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால், குளறுபடி கேள்விகளுக்குரிய மதிப்பெண்களை முழுமையாக மாணவர்களுக்கு தர வேண்டும்."

- ஒவ்வொரு வருடமும் பொதுத் தேர்வின் பொது எதாவது ஒரு வினாத்தாளில் தவறான கேள்விகளை கேட்டு வைப்பதே வடிக்கை யாகிவிட்டது. இதனால் பதிக்கப் படுவது மாணவர்கள் தான். இந்த வருடம் வேதியியல் தேர்வில் சில கேள்விகள் தவறாகவும், பாட திட்டத்திலிருந்து இல்லாத வினாவாகவும் கேட்கப் பட்டுள்ளது. இதனால் குறைந்த பட்சம் ஆறு மதிப்பெண்களை 'இலவசமாக" கொடுக்க வேண்டியுள்ளது. இந்த ஆறு மதிப்பெண்கள் பொறியியல், மருத்துவ சேர்க்கையின் பொது பெரிய விளைவை ஏற்படுத்தும். சரியான கேள்விகளை கேட்டிருந்தால் ஒருவேளை சில மாணவர்கள் தவறான பதில்களை எழுதி இருக்கலாம். அதனால், உண்மையாகவே பதில் தெரிந்த மாணவர்களை இது வேறு படுத்திக் காட்டும். இதுமட்டும் அல்லாது, விடைத்தாள்களை திருத்தும் பணியிலும் பல குழப்பங்கள் நேரும். நன்றாக படிக்கும் மாணவன் தீடீரென்று நாற்பது மதிப்பெண்களை பெறுவான். அப்பறம், மறுமதிப்பீட்டிற்கு முறையிட்டுப் பார்த்தால், தொண்ணுறு சதவிகிதத்திற்கு மேல் வாங்கியிருப்பான்.

எப்படி இந்த மாதிரி தவறுகள் நடக்கிறது என்று தெரியவில்லை. ஒரு ஆசிரியர் வினாத்தாளை தயார் செய்கிறார் என்றால், சில பேர்களாவது அதை பார்த்து படித்து, சரி பார்ப்பார்கள். இதனை பேர்களையும் தாண்டி, ஒவ்வொரு வருடமும் இந்த பிரச்சனை தொடருகிறது என்றால், தேர்வுத் துறையின் முறையில் தான் எதாவது பிரச்சனை இருக்க வேண்டும். விதிமுறைகள் சரியாக இல்லையா, அல்லாது அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றுவது இல்லையா என்று தெரிவவில்லை.

சமீபத்தில் ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவில், கொரியா அரசாங்கம் நுழைவு தேர்வை நடத்த என்ன என்ன செய்கிறது என்று எழுதிஇருந்தார். சாதாரண ஒரு வினாத்தளை கூட சரியாக தயாரிக்க முடியாத நம் அரசிடம் இருந்து, இந்த மாதிரி வசதி களை எல்லாம் எப்படி எதிபார்ப்பது? தமிழ்நாட்டு மாணவர்களின் தலைவிதி!

 
Watch the latest videos on YouTube.com