Sunday, September 28, 2008

தமிழர்களின் படிக்கும் பழக்கம்

இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலமான கேரளா, செய்தித்தாள்கள், வார இதழ்கள், புத்தகங்கள் படிப்பதிலும் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கேரளாவில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் எடுத்தக் கருத்துக் கணிப்பில் 90 சதவிகிதம் பேர் தொடர்ந்து படிப்பதாக தெரிவித்துள்ளனர். நம் தமிழ் நாட்டில் மட்டும் ஏன் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என்று தெரியவில்லை. நல்ல எழுத்தாளர்கள் இல்லையா? நல்ல எழுத்துக்களை அச்சிட பிரபல பத்திரிக்கைகள் முன் வருவதில்லையா? வேறு பொழுது போக்கு அம்சங்கள் வந்து விட்டதனால் நாம் படிக்கும் பழக்கத்தை இழந்து வருகிறோமா? 

எழுத்தாளர் ஒருவர் இதைப்பற்றி வருத்ததோடு அவரது இணைய தளத்தில் எழுதி இருந்தார். உலக எழுத்தாளர்களின் புத்தகங்கள் எல்லாம் லட்ச கணக்கில் விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் போது, தமிழ் புத்தகங்கள் மட்டும் சில ஆயிரங்களே விற்பனை ஆவதாக அவர் சொல்லியிருந்தார்.உண்மைதான். இப்போதெல்லாம் படிப்பதற்கு நேரம் இல்லாமல் போய்விட்டது பலருக்கு. தொலைக்காட்சிப் பெட்டி வருவதற்கு முன்னால் வரை, படிக்கும் பழக்கம் பலரிடம் வெகுவாக இருந்து வந்தது. குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் நிறைய படித்து வந்தனர். அம்புலிமாமா, கோகுலம் போன்ற பத்திரிக்கைகள் சிறுவர்களுக்காகவே வந்து கொண்டிருந்தது. மங்கையர் மலர், ராணி போன்ற வாரப் பத்திரிக்கைகள் மகளிரை மிகவும் கவர்ந்து வந்தது. ஆனால் தொலைக்காட்சி பெட்டி வந்த பிறகு, இந்த படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. சிறுவர்கள் முதல், மகளிர், ஆண்கள் வரை அவரவர் களுக்கு தேவையான நிகழ்ச்சிகளுக்கு முன் உட்கார்ந்து விடுகின்றனர். கேரளா மக்கள் தொலைக்காட்சி மூலம் வரும் பல்வேறு உப்புச் சப்பில்லாத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை என்றும் ஆச்சரியத் தகவலை வெளியிட்டுள்ளனர். இதுதான் அவர்களின் படிக்கும் பழக்கத்தை அதிகரித்து வருகிறதா என்று தெரியவில்லை. அதனால் தான் அங்கு எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. இங்கு நடிகர்களுக்கும், ஆபாசமாக நடிக்கும் நடிகைக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.கணினி விளையாட்டுகள் வந்த பிறகு நகர்புற சிறுவர்கள் எல்லாம் வீதியில் வந்து விளையாடுவதை கூட நிறுத்தி விட்டனர்.என் சம வயது உள்ள இளைநர்களில் மிகச்சிலரே படிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் ஆங்கில புத்தகத்தை மட்டுமே விரும்பி படிக்கின்றனர். தமிழில் படிக்கும் மிகச்சிலரில் அசோக மித்திரன், ஜெய காந்தன் வரை யாரும் செல்வதில்லை.

இன்று தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளை பார்க்க சகிக்கவில்லை. குமுதம், விகடன் போன்ற பத்திரிக்கைகளும் வியாபார நிர்பந்தத்தினால் தங்களது தரத்தை குறைத்து விட்டன. எங்கு பார்த்தாலும் சினிமா பற்றிய செய்திகளே. இதை மாற்ற வேண்டுமானால் நல்ல எழுத்தாளர்கள் பலர் வர வேண்டும். பத்திரிக்கைகளும் நல்ல தரமான கட்டுரைகளுக்கு, கதைகளுக்கு சில பக்கங்களையாவது ஒதுக்க வேண்டும். இப்பொழுது வலைப்பதிவின் மூலம் பல எழுத்தாளர்கள் எழுத ஆரம்பித்திருப்பது நல்ல விசயமே. இதன் மூலம் பலர் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வர்.

Sunday, September 14, 2008

இந்தியா டுடே கருத்துக் கணிப்பு


சமீபத்தில் நடந்த இந்தியா டுடே கருத்துக் கணிப்பு முடிவுகள்...

நன்றி : இந்தியா டுடே

Friday, September 12, 2008


தினமலரில் வந்த 'ஒரு மணி நேரத்தில் ஆயிரம் இட்ல்லிகள் சுடச்சுட தயார்' என்கிற செய்தி என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. இந்தியா தொழில்நுட்பத் துறையில் "அதிவேக வளர்ச்சி" அடைந்து வருகிறது என்று ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரை அதற்குச் சான்றாக ஒருமணி நேரத்தில் ஆயிரக்கணக்கான இட்லி, தோசை , சப்பாத்தி போன்ற உணவுகளை சமைக்கும் இயந்திரத்தை சான்றாக காட்டுகிறது. இதற்கான ஆய்வை மேற்கொண்டு தானியங்கி இயந்திரத்தை வடிவமைத்துள்ள நிறுவனம் ' மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்.

நம் நாட்டில் உணவுக்காக கொடுக்கப்படும் முக்கியத்துவம் வியக்க வைக்கிறது. இத்தனை வகையான உணவுகளை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. ஆனால் நம் உணவுகள் நம்மக்கு தரும் ஊட்டசத்துகளைப் பற்றியோ, அங்காடிகளில் விற்கப்படும் உணவுகளின் தரத்தைப் பற்றியோ யாரும் வெகுவாக கவலைப் படுவதாக தெரியவில்லை. இதற்காக பெரிய அளவிலே ஆராய்ச்சிகள் ஏதும் நடப்பதாக தெரியவில்லை. காப்பி பொடியில் ஆரம்பித்து பால், உப்பு, மிளகாய், மஞ்சள் தூள் போன்ற அன்றாடம் பயன் படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதனால் நம் அன்றாடம் சமைக்கும் உணவுகளின் தரம் கேள்விக் குறியாகி வருகிறது. அதேநேரத்தில், நம் பண்டைய உணவு முறையிலிருந்து சிறிது சிறிதாக மாறி வருவதால் இன்று இயற்கையாக கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துகள் கூட கிடைப்பதில்லை. அரசு நியாய விலைக்கடைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் தரமும் மோசமாக உள்ளது. 

இது ஒரு புறம் இருக்க, உணவு விடுதிகளின் கிடைக்கும் உணவில் தரமோ மிகவும் மோசமாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் குமுதத்தில் வந்த ஒரு கட்டுரையில் தினமும் இறைச்சி யை உண்டு வந்த ஒருவருக்கு புற்று நோய் வந்தது பற்று எழுதப் பட்டிருந்தது. அதற்கான காரணம் சிக்கனில் கலக்கப்படும் ஒருவித ரசாயணம் என்றுக் கண்டறியப்பட்டது. இன்று பிழைப்புக்காக பல ஊர்களின் தங்கி வேலைப் பார்க்கும் பலரது பசியைப் போக்குவது இந்த உணவு விடுதிகள் தான். சென்னை போன்ற நகரங்களில் உணவு விடுதிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடியும்.  

இவ்வாறாக வீட்டில் கிடைக்கும் உணவிலும், வெளியில் கிடைக்கும் உணவிலும் கிடைக்கும் ஊட்டச்சத்து குறைபாடிலோ, தரத்திலோ நாம் அக்கறைக் கொள்வதாக தெரியவில்லை. அரசும் மற்றும் உணவு ஆராய்ச்சி நிறுவனங்களும் இது போன்ற ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதையோ அல்லது இருக்கும் விதிகளில் முறையாக செயல் படுதுவதிலோ அக்கறை காட்டுவதில்லை. ஆயிரம் இட்லிகளை கொடுக்கும் இயந்திரங்களை செய்வதோடு, மற்ற உபயோகமுள்ள பணிகளில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.

Tuesday, September 2, 2008

Knowledge@Wharton

Wharton Businees School, University of Pennsylvania, came up with a program called "knowledge@wharton. They interview eminent people from all the profession and upload it in YouTube videos.I saw the interview with Former Indian President APJ Abdul Kalam. Wharton invited him for the 2008 Wharton India Economic Conference.He talks about his experience in ISRO and as a President. He said the Rashtrapathi Bhavan is powered by solar energy. This is the first building in India powered by only solar energy. He talks about his Pura project and the 2020 vision.

Here is the video for you:



Here is the link for Wharton Knowledge site for INDIA:

http://knowledge.wharton.upenn.edu/india/index.cfm
 
Watch the latest videos on YouTube.com