Friday, July 10, 2009

திருந்தாத தமிழ் சினிமா!

மீபத்தில் M குமரன் S/O மகாலட்சுமி படம் பார்த்தேன். முதலில் நன்றாக துவங்கிய படம், நதியா இறந்த பிறகு மிகையாக மாறியது. தமிழ் சினிமாவிற்கே உரிய அம்மா, அப்பா, தங்கச்சி செண்டிமெண்ட், ஆபாசமான, அருவருக்க தக்க காமெடிகள், ஆங்கங்கே பாடல்கள், காதல் காட்சிக்கு மட்டும் ஹீரோயின். கடைசியாக வில்லனை வீழ்த்தி ஹீரோ ஜெயிப்பது, குடும்பத்தையும் காதலையும் சேர்த்து "சுபம்" போடுவது என்று டிபிகல் தமிழ் சினிமாவாக முடிந்தது. இந்த மாதிரி படங்களை எல்லாம் மூணு மணி நேரம் திரைஅரங்கில் பார்ப்பது கொடுமை. அடுத்தது என்ன நடக்கும், படம் எப்படி முடியும் என்பது பாதியிலேயே தெரிந்து விட்டது. இந்த படத்தில் வரும் அபத்தமான காட்சிகள், பொதுவாக எல்லா தமிழ் சினிமாவிலும் வரும்.

தங்கச்சியை வில்லன் கற்பழித்து விடுகிறான். வில்லன் கெட்டவன் என்று தெரிந்தும், அவனிடம் தங்கச்சியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு ஹீரோ கெஞ்சுகிறார். இறுதிப் போட்டியில் "நீ தோற்றால் உன் தங்கைச்சியை நான் கல்யாணம் செய்துக் கொள்கிறேன்" என்று வில்லன் சொல்வதை கேட்டு, வெற்றியை தியாகம் செய்யப் பார்க்கிறார். என்ன கொடுமை என்றால், ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்தால், அவன் தான் அவளை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சாவதை தவிர அந்தப் பெண்ணுக்கு வேறு வழி இல்லை. ஒரு அய்யோகியனை கல்யாணம் செய்துக் கொண்டு அந்த பெண் எப்படி சந்தோசமாக வாழ முடியும்?
பெண்ணடிமைத்தனம் என்பது சினிமாவில் ஊறிப் போய் உள்ளது.

இரண்டாவதாக, காமெடி என்ற பெயரில் உடல் ஊனமுற்றோரையும், பெண்களையும், மனநிலை குறை பாடு உள்ளவர்களையும் அசிங்கப் படுத்துவது. இந்தப் படத்தில் வரும் காமெடியை போலவே (இன்னும் அசிங்கமாகவே) பல தமிழ் படத்தில் வருகிறது. இதையெல்லாம் எப்படி குடும்பத்தோடு ஒருவர் சென்று ரசிப்பது? பெண்களை இன்னும் sexual object ஆகவே சித்தரிக்கிறார்கள். கை, கால் ஊனம், திக்கு வாய், கண் பார்வை குறைவு, உடல் பருமன், சொட்டை தலை, என்று இந்த குறை பாடுகளை வைத்து காமெடி பண்ணுபவர்களே அதிகம். அந்த காலத்தில் கவுண்டமணி ஆரம்பித்தது. இன்னும் அதையே போட்டு அரைக்கிறார்கள்.

அடுத்தது, ஒரு கடை தெருவில் (அ) கோவில், காப்பி ஷாப், திரைஅரங்கு, பெரிய வணிக வளாகம் போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் ஹீரோயினை (அ) ஹீரோவின் தங்கச்சியை வில்லன் கும்பல் கற்பழிக்க துரத்தும் (அந்த வில்லன் ஒரு மந்திரியின் மகனாகவோ, இல்லை பெரிய கடத்தல் காரனின் மகனாகவோ இருப்பார்). சிறிது நேரம் துரத்திக் கொண்டே இருப்பார்கள். கடைசியாக ஜாக்கெட்டை கிழிக்கும் போது ஹீரோவின் கை வந்து தடுக்கும். அதுக்கப்பறம் நடக்கபோவது தெரிந்ததுதான். பார்த்து பார்த்து சலித்து, புளித்து போய்விட்டது.

காதல் கட்சிகளுக்கும், சில ஆபாச அசைவுகளுக்கு மட்டுமே ஹீரோயின். வெள்ளை தோளோடு, குறைந்த பட்ச உடையோடு, கொஞ்சம் தமிழ் நிறைய ஆங்கிலம் பேசிக் கொண்டு ஒரு லூசு போல வளம் வருபர்தான் இந்த ஹீரோயின். சுகாசினி, ஊர்வசி, ரேவதி போன்ற நடிகைகளுக்கு அப்பறம் யாரும் நடிக்கிற மாதிரி தெரியல. சினேகா, பார்வதி மாதிரி ஒன்னு ரெண்டு தான் தேறுது. இங்கேயும் பெண் ஒரு sexual object தான்.

மகள் கற்பமாக உள்ளது தெரியும் போது பூச்சி மருந்து வாங்கி தற்கொலைக்கு முயல்வது, அம்மாவை டைவர்ஸ் செய்யும் அப்பா, சித்தி கொடுமை, தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கும் பாடல்கள்...இன்னும் பல பல அபத்தங்கள்...

எப்போது திருந்தும் இந்த தமிழ் சினிமா?


1 comment:

  1. உங்கள் தகவல் அனைத்தும் அருமை , உங்கள் blog ஐ bookbark செய்துள்ளேன்

    நன்றி

    ReplyDelete

 
Watch the latest videos on YouTube.com