Saturday, August 27, 2011

கிறுக்கல்கள் - ஒன்று

மறுபடி எதாவது கிறுக்கலாம் என்று இருக்கிறேன். ரொம்ப நாளா இந்த பக்கமே வரல. இந்த பக்கத்தை ஆரம்பிச்சு எதாவது எழுதலாம் என்று இருந்தேன். எழுத தெரியல. மறுபடி எனது வாசிப்பை துவங்கி இருக்கிறேன். மறுபடி சுஜாதா. சில புத்தகங்களை ஆன்லைன் ல வாங்கி படிக்க ஆரம்பித்து இருக்கேன். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும். ஆனந்த விகடனில் தொடராக அவந்தபோது படித்தது. அதன் பிறகு புத்தகமா வந்தபோது வங்கிப் படித்தேன். சில சமயம் இணையத்தில் படித்ததுண்டு. ஒவ்வொரு தடவை படிக்கும்போது, அடையும் இன்பத்துக்கு அளவே இல்லை. தினமும் அலுவலகத்தில், உணவு இடைவேளையின் போது நாலைந்து அத்தியாயங்கள் படிப்பேன். சுகம். படித்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும். அதற்குள் முடிந்து விட்டதே! இன்னும் வாங்கிப் படிக்க வேண்டும். படிக்க பொறுமை வேண்டும், அதை விட எழுத. பள்ளியில் படிக்கும் போது நிறைய படிப்பேன், எழுதுவேன். விவாதிக்க நிறைய பேர் இருந்தார்கள். இப்போதெல்லாம், தமிழ் படித்தவர்களை காண்பதே அரிதாக இருக்கிறது. சுஜாதா, எப்படி இவ்வளவு விசயங்களை தெரிந்து வைத்துள்ளார் என்று வியப்பாக இருக்கிறது. எல்லாத்தையும் படித்து, புரிந்து அழகாக, எளிய நடையில் எழுதுகிறார். ம்ம்..பார்க்கலாம். நாமும் எதாவது எழுதலாம். அட..எழுதிதான் பாக்கலாமே. எப்படி ஆரம்பிப்பது? ஒரு பக்க கதை எழுதலாமா? சிறுகதை? விஞ்யான சிறுகதை? இல்ல கற்றதும் பெற்றதும் போல , பார்த்ததை, படித்ததை, அனுபவங்களை எழுதலாமா? தெரியல...ஆனா எதையாவது எழுதி 'நடை' பயில வேண்டும். தோணுவதை எல்லாம் எழுதலாம் என்று இருக்கிறேன்.

No comments:

Post a Comment

 
Watch the latest videos on YouTube.com