Wednesday, September 9, 2009

இலவச திருமணங்கள் தேவையா?

எப்போதான் இந்த இலவசங்கள் நிற்குமோ? இரண்டு லட்சத்து 29 ஆயிரம் திருமணங்களை நிதி கொடுத்து நடத்தியதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் மாநிலம் தமிழ் நாடாகத்தான் இருக்கும். எத்தனையோ பேர் ஒரு வேலை சாப்பாட்டுக்கு இல்லாமலும், துணி இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தவிக்கின்றனர். இங்கு என்னடா ன்ன, இலவச தொலைக்காட்சியும், பொங்கல் வெய்க்க மாளிகை சாமானும், குறைந்த விலையில் தரமான மதுவும் கொடுக்கிறார்கள். மக்கள் பணத்தில் தனது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக கொண்டாடுகிறார்கள். கடைசியாக "இவற்றை எல்லாம் பார்க்கும் போது, எனக்கே கூட இப்போது நமக்கு திருமணம் நடந்திருக்கக் கூடாதா என்ற ஆசை ஏற்பட்டது" என்று சொல்லி தனது ஆசையையும் வெளிப்படுத்திவிட்டார் தலைவர்.



செய்தி:


சென்னை :""தி.மு.க.,வின் குரலை அடக்க தமிழகத்தில் எந்த சக்தியும் இல்லை,'' என முதல்வர் கருணாநிதி பேசினார். தி.மு.க., சார்பில், 86 ஜோடிகளுக்கு நேற்று அண்ணா அறிவாலயத் தில் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏழை வீட்டுத் திருமணம் என்றால், 5,000 ரூபாய் வீதம் தந்து, பின் 10 ஆயிரம் ரூபாய் என விரிவாக்கி, 20 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படுகிறது.



ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின் நிதி அளிக்கப்பட்டு நடந்த திருமணங்கள், இரண்டு லட்சத்து 29 ஆயிரம். அந்தப் பெரும் கடலில், இன்று நடக்கிற இந்த 86 திருமணங்களும் இணைகின்றன. இது என் 86 வயதைக் குறிக்கும் அடையாளமாக நடக்கிறது.வீட்டை விட்டு நேற்று காலை வெளியேறும்போது ஒரு திருமணத்தை நடத்தி வைத்து விட்டுத் தான் கிளம்பினேன். வாரத்தில் ஐந்து நாட்களாவது என் இல்லத்தில் சுயமரியாதை திருமணம் நடக்கிறது. இங்கு 86 திருமணங்களை நடத்தி அவர்களுக்கு தரப்பட்ட சீர்வரிசைகள், விளக்கு, குடம், வேறு பொருட்கள், இவற்றை எல்லாம் பார்க்கும் போது, எனக்கே கூட இப்போது நமக்கு திருமணம் நடந்திருக்கக் கூடாதா என்ற ஆசை ஏற்பட்டது.



அந்த அளவுக்கு பளபளக்கும் விளக்குள், குடங்கள், தாம்பாளங்கள், மெத்தைகள், தலையணைகள் வழங்கப்பட்டுள்ளன.அரசு நடத்தும் திருமணங்கள் இன்றி தமிழகத்தில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். நெருக்கடி காலத்தில், கோவிலுக்குப் போவதாக சொல்லிவிட்டு, நம் கட்சியினர் சீர்திருத்த திருமணங்களில் கலந்துகொண்டதை நினைத்துப் பார்க்கிறேன். இந்தக் கட்சிக்கு எவ்வளவு சோதனைகள், நெருக்கடி, அடக்குமுறைகள் ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு, கட்சியை தழைக்கச் செய்யும் வல்லமை தி.மு.க.,வினருக்கு உண்டு.எந்த வசதிகள் இருந்தாலும், எந்த வாய்ப்புகள் நமக்கு மறுக்கப்பட்டாலும், நம் குரல் ஓங்கி ஒலிக்கும். ஏனெனில், இது ஈ.வெ.ரா.,வின் குரல்; அண்ணா துரையின் குரல். இந்தக் குரலை அடக்க எந்த சக்தியும் தமிழகத்தில் இல்லை என்றார்.


நன்றி: தினமலர்

No comments:

Post a Comment

 
Watch the latest videos on YouTube.com