Thursday, October 1, 2009

உன்னைப் போல் ஒருவன் படம் பார்த்தேன். ரொம்ப நாள் கழித்து தியேட்டருக்கு சென்று பார்த்த படம். நல்ல படம். கமல், மோகன் லால், அவருக்கு கீழ் பணிபுரியும் இரண்டு போலீஸ் அதிகாரிகள், டிவி நிருபர் உட்பட அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.வசனத்தை சிறப்பாக எழுதி இருந்தார் முருகன். ஒளிப்பதிவும் மிக அருமை. ஹிந்தி படத்தை விட மிக அருமையாக இருந்தது. செயற்கையான பாடல் கட்சிகள் இல்லாமல், காமெடி என்ற பெயரில் ஆபாசம் செய்யாமல் இரண்டு மணி நேரத்தில் விறு விறுப்பான படம்!

படம் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, கமல் பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு படத்தின் வெற்றியைப் பற்றி சிலாகித்து பேசினார். Youtube இல் பார்த்தேன். அதிர்ந்தேன். தான் தான் இந்த வெற்றிக்கு முழு காரணம் என்பது போல பேசி மற்றவர்களை எல்லாம் இருட்டடிப்பு செய்தார். ஸ்ருதியைப் பற்றி பேசியதை விட மற்றவர்களை பற்றிப் பேசியது ரொம்ப கம்மி. பலரும் வசனத்தை பெரிதும் பாராட்டினர். உண்மை. வசனங்கள் எல்லாம் மிக அருமையை இருந்தது. ஆனால், படத்தின் வசனகர்த்தாவான முருகனைப் பற்றி பேச்சே இல்லை. அவருடைய பேரை எந்த இடத்திலும் உச்சரிக்கவே இல்லை! அதை விடக் கொடுமை, இந்தக் கதையை தானே சிந்திததுபோல் பேசியதுதான். இந்தப் படத்தின் வெற்றிக்கு பெரும் காரணம் படத்தின் கதை. அது கதையின் சொந்தக் காரரான நீரஜ் க்கு மட்டுமே போய் சேரும்.

இன்னொரு கொடுமை மோகன் லாலைப் பற்றி பேசாதது. உண்மையிலேயே , கமலை விட எனக்கு லாலின் நடிப்புதான் பிடித்திருந்தது. அனுபம் கேர் ரை விட பல மடங்கு சிறப்பாக செய்து படத்தை துடிப்புடன் கொண்டு செல்பவர் அவர்தான். இப்படி எல்லாரையும் இருட்டடிப்பு செய்து, ஏன் இப்படி சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்று தெரியவில்லை. அதிலும் தான் மகளைப் பற்றி ஒரே பேச்சு. கமல் ஒரு சிறந்த நடிகர் , நல்ல சினிமா அறிவுடையவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மற்றவரை பாராட்டும் குணம் இப்பொழுது அவரிடம் குறைந்து வருகிறது. "நான்" என்ற ஆணவமோ?

இந்தக் கதையைப் போல, சுயமாக சிந்தித்து, வருங்காலத்தில் நல்ல படங்களை ( தசாவதாரம் போல் இல்லை!) கமல் எடுப்பார் என்று நம்புவோமாக.

1 comment:

  1. தலைக்கனம் தலையில் ஒன்றும் இல்லைனா வரும். அதான் அதோட மேஜிக்.

    ReplyDelete

 
Watch the latest videos on YouTube.com