Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Sunday, May 17, 2009

தேர்தல் 2009 - ஒரு பார்வை

தேர்தல் முடிந்து விட்டது. மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், கடினமான மேலாண்மைப் பணிகளில் ஒன்றாகக் கருதப் படும் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். அரசியல் வாதிகளும், அரசியல் ஆய்வாளர்களும், விமர்சகர்களும் ஒன்று நினைக்க, மக்கள் வேறொன்று நினைத்து விட்டார்கள். ஆனால், சரியான நல்ல தீர்ப்பைதான் வழங்கியிருக்கிறார்கள். இந்த முடிவில் இருந்து தெரிந்துக் கொள்ளக்கூடிய நல்ல , கெட்ட விசயங்களாக எனக்குப் பட்டவை:
  • இந்திய மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சிந்தித்து தேசிய கட்சிக்கு ஓட்டு அளித்து உள்ளனர். இந்திய போன்ற மிகப் பெரிய, இன, மொழிகளால் வேறுபட்ட நாட்டில் பல கட்சிகள் இருப்பது தவிர்க்க முடியாது. 1991க்கு பிறகு தேசிய கட்சிகளால் பெரும்பான்மை பெற முடியாததால், மாநில கட்சிகளையும், சிறு சிறு ஜாதிக் கட்சிகளையும் நம்பியே இருந்து வந்தது. இதனால் பல பிக்கல்கள், பிடுங்கல்கள். அனைவரையும் "திருப்தி" படுத்த வேண்டிய நிலை. எந்த ஒரு முடிவையும் தெளிவாக, உறுதியாக எடுக்க முடியாத நிலை. ஆட்சியை காப்பாற்றவே அதிக நேரம் செலவிடப் படவேண்டிய கட்டாயம். இந்த முறை கங்க்ரச்ஸ் அதிக இடங்களை பெற்றதால், நிலையான, உறுதியான அரசை எதிர் பார்க்க முடியும்.
  • பழையன கழிதலும் புதியன புகுதலும் - என்கிறது நன்னூல். காலத்துக் கேற்ப கொள்கைகளில் மாற்றம் வருவதில் தவறேதும் இல்லை. ஆனால், தோழர்கள் பிடிவாதமாக "பல" கொள்கைகளை எதித்தனர். கேரளாவும், மேற்கு வங்கமும் தொழில் துறையில் மற்ற மாநிலங்களை விட பின் தங்கி இருப்பது அந்த மக்களை சிந்திக்க வைத்துள்ளது. அதனால் இந்த முறை வலது, இடதுகளுக்கு தக்க பாடம் புகட்டிவிட்டனர். இனிமேலாவது, தங்கள் கொள்கைகளை மறு ஆய்வு செய்து, கொஞ்சம் மாறினால் நல்லது. இல்லையெனில், மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் மறந்து விடவேண்டியது தான்.
  • அரசியல் பச்சோந்திகளை மக்கள் அடையாளமும் கண்டுக் கொண்டு விட்டனர். தங்கள் சுய நலத்துக்காக அடிக்கடி அணிமாறியும், அரசை மிரட்டி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தவர்களையும் மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டனர். லல்லு, முலாயம், பஸ்வான், மாயாவதி, ராமதாஸ் போன்றோர் இனி திருந்தினால் நன்று.
  • தென்னிந்தியாவில் அரசியலையும், சினிமாவையும் பிரிக்க முடியாது. எம்ஜியார், என்டியார் போன்றோரின் வெற்றி பலரையும் அரசியலுக்கு வர தூண்டியது; தூண்டிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் புதிதாக கட்சி தொடங்கி, ஆட்சியை பிடிக்க முயன்ற சிரஞ்சீவி தோல்வியை சந்தித்து இருக்கிறார். வெறும் பதினெட்டு தொகுதிகளோடு கனவு கலைந்தது. மிக சாதரணமாக வெற்றி பெறுவர் என்று எதி பார்க்கப்பட்ட சிரஞ்சீவி தனது சொந்த ஊரிலேயே தோல்வியை தழுவி இருக்கிறார்.திருப்பதியில் கூட வெற்றி வித்தியாசம் மிகக் குறைவு. கட்சி ஆரம்ப விழாவில் கூடிய கூடத்தைக் கண்டு மிரண்டு போனவர்கள் இப்போது சிரிக்கிறார்கள். இவரின் தோல்வி மற்றவர்களை ஒருகணம் சிந்திக்க செய்யும்.
  • பொருளாதாரம் பாதிப்பு, விலை வாசி பிரச்னை, தொடர் குண்டு வெடிப்பு போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும், காங்கிரசஸ் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், சரியான எதிக் கட்சி இல்லாதது. பாரதிய ஜனதா கட்சியை இன்னும் ஒரு முழு தேசியக் கட்சியாக மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அவர்களது இந்துத்துவ கொள்கை. பல ஜாதி, மொழி, இன மக்கள் வாழும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான கட்சியாக தங்களை சித்தரித்துக் கொள்கிறது. இந்த தோல்வியின் மூலம், தங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டல் அவர்களுக்கு நல்லது.
  • இந்த தேர்தலில் கரும் புள்ளியாக இருப்பது பணநாயகம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பணம் பல வெற்றிகளை தீர்மானித்திருப்பது ஜனநாயகத்திற்கு பெரிய சவால். இதனால் பதவி காலத்தில் என்ன தவறு செய்தலும், கடைசியாக பணம் கொடுத்து வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கும். அடுத்த தேர்தலுக்கு தங்களை தயார் செய்ய ஊழல் செய்ய தூண்டும். சாமானியர்கள் தேர்தலில் நிக்க தயங்கும் நிலை ஏற்படும். இதற்கு ஏழை மக்களை குறை சொல்ல முடியாது. பணத்தேவையை பூர்த்தி செய்ய பணத்தை வங்கிக் கொண்டு அவர்களுக்கே ஓட்டும் போடுகிறார்கள், நன்றி உள்ளவர்கள்!
  • அடுத்ததாக, அரசு இயந்திரத்தை ஆளும் கட்சியினர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. சிவகங்கை, விருது நகரில் நடந்த குழப்பங்கள் அதை ஊர்ஜிதம் செய்வதாகவே உள்ளது. அரசு பணியாளர்கள் எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமல் , நேர்மையாக பணியாற்றினால் நல்லது.

Tuesday, April 7, 2009

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்



மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic voting machine) என்பது வாக்கைப் பதிவு செய்யும் வசதியளித்து, அப்பதிவைச் சேமித்து, பின்னர் வாக்குப்பதிவின் இறுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வெளிக்காட்டும் இயந்திரமாகும். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஓட்டுச் சீட்டு அடிப்படையிலேயே, தேர்தல் நடைமுறைகள் துவங்கின. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப கடந்த சில தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வந்ததன் அவசியம் மற்றும் வரலாற்றை தெரிந்து கொள்வோம். பல கோடி மக்கள் பங்கேற்ற இந்திய தேர்தலில் ஓட்டுச் சீட்டுகளால் ஏற்பட்ட கால விரயம், பண விரயம் ஆகியவற்றைத் தடுக்கவும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையாகவும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இதை அறிமுகப்படுத்தும் முன் சம்பத், இந்திரேசன், ராவ் கசர் பாதா ஆகியோரைக் கொண்ட தொழில்நுட்ப குழுவின் கருத்து கேட்கப்பட்டது. அக்குழு ஒருமனதாக பரிந்துரை செய்த பிறகே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் ஆலோசிக்கப்பட்டது. கேரளாவில் 1982ம் ஆண்டு நடந்த பரூர் இடைத்தேர்தலின் போது, சோதனை முயற்சியாக 50 ஓட்டுச் சாவடிகளில் மின் னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் 10 லட்சத்து 75 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மத்திய அரசு நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனம், இந்திய மின்னணு கழகம் ஆகியவை இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந் திரங்களை தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகின்றன. 1996ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 8,800 டன்னும், 1999ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 7,700 டன்னும் காகிதம் பயன்படுத் தப்பட்டது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால், ஒரு ஓட்டுச் சாவடிக்கு ஒரு ஓட்டுச்சீட்டு மட்டுமே தேவைப்படுவதால், காகிதம் மற்றும் அச்சிடும் செலவு வெகுவாகக் குறைந்தது.

இந்த இயந்திரம், கட்டுப் பாட்டு யூனிட், ஓட்டுப்பதிவு யூனிட் என இரு யூனிட்களை கொண்டது. கட்டுப்பாட்டு யூனிட் தேர்தல் அதிகாரி இருக்கும் இடத்திலும், ஓட்டுப்பதிவு யூனிட் வாக்காளர் ஓட்டளிக்கும் இடத்திலும் இருக்கும். இந்த இரு யூனிட்களும் ஐந்து மீட்டர் நீளமுள்ள கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக் கும். ஒரு வாக்காளர் வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தியதும், அந்த வேட்பாளருக் கான ஓட்டுப்பதிவாகி விடும். அதன்பின் கட்டுப்பாட்டு பிரிவிலுள்ள ஓட்டு பொத் தானை ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மீண்டும் அழுத்தினால் தான், இயந்திரம் அடுத்த ஓட்டை பதிவு செய் யும். இயந்திரத்தின் சாவி பதிவு செய்யப்படும்போது, தேதியும், நேரமும் பதிவாகி விடும். ஓட்டுப்பதிவு முடிந்ததும், மூடுவதற்கான பொத்தானை அழுத்திவிட்டால் இயந்திரம் எந்த புள்ளிவிவரத்தையும் ஏற்காது. மொத்தம் என்ற பொத்தானை அழுத்தினால், அதுவரை பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையை காட்டும். இதை 17-ஏ படிவத்தில் உள்ள வாக்காளர் பதிவு புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம். ஓட்டுப்பதிவின் போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அதற்கு பதில் புதிய இயந்திரத்தை அப்பகுதிக்கான அதிகாரி பொருத்துவார். பழுதான இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அதன் 'மெமரி'யில் அப்படியே இருக்கும் என்பதால், முதலில் இருந்து ஓட்டுப்பதிவை நடத்த வேண்டியதில்லை. இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு ஐந்து ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்யாது. யாராவது ஓட்டுச் சாவடியை கைப் பற்ற முயன்றால், தலைமை அலுவலர் 'முடிவு' பொத் தானை அழுத்தி ஓட்டுப்பதிவை நிறுத்திவிட முடியும். பார்லிமென்ட், சட்டசபை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், இரண்டிற் கும் தனித்தனி இயந்திரம் பயன்படுத்தப்படும். 'முடிவு' பகுதி முத்திரையிடப்படா விட்டால், ஒரு குறிப்பிட்ட ஓட்டுச் சாவடியின் முடிவுகளை குறிப்பிட்ட நாளில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் முன்னரே தெரிந்து கொள்ள இயலும். இதனால், முத்திரை இடப் பட்ட பட்டையிலோ, காகித் திலோ தேர்தல் அதிகாரி மைய தலைவரின் முத்திரைகளுடன், வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி கையொப்பம் இடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார். ஓட்டு எண்ணும் மையத்தில், 'முடிவு' பொத்தானை அழுத்தியதும், அதன் திரையில்அந்த சாவடியில் பதிவான மொத்த ஓட்டுகள், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள் வரிசையாக தோன்றும். ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களை தவிர, வேட் பாளர்களின் பிரதிநிதிகளும் இதை குறித்துக் கொள்வர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அந்தச் சுற்றின் முடிவுகளும், மொத்த கூட்டுத் தொகையும் அறிவிக்கப்படும். சுற்று அடிப்படையிலான முடிவுகளை மொத்தமாக கூட்டி, இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

விளக்க படங்கள்:

  


நன்றி : http://ta.wikipedia.org/விக்கி, www.eci.gov.in/

Sunday, April 5, 2009

இந்தியா ஏழை நாடா?

சுவிச்லேர்லாந்து சாக்லேட்டுக்கும், Cheese க்கு மட்டும் அல்ல, ரகசிய  வங்கி கணக்குகளுக்கும் பெயர்போனதே. உலகத்தில் உள்ள அணைத்து திருடர்களின் கருப்பு பணங்கள் பத்திரமாக வைக்கப் பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. உலகில் நிலவும் பொருளாதார மந்த நிலையினால் பதிக்கப்பட்ட அமெரிக்க புது முடிவை எடுத்துள்ளது. அதன் படி சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக பணம் வைத்திருப்பவர்கள், தாமாகவே முன்வந்து ஒப்புக் கொண்டு சரியான வரி செலுத்தினால், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். அதோடு இல்லாமல் சுவிஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அமெரிக்கர்கள் வைத்திருக்கும் ரகசிய வங்கி கணக்குகளை தருமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே ஒரு சுவிஸ் வங்கி அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து, வங்கிக் கணக்குகளை தருவதாகவும், இத்தனை நாள் மறைத்து வைத்ததற்காக அபராதமும்  கட்டியுள்ளது. இதனை தொடர்ந்து பல நாடுகளும் தங்கள் குடிமக்களின் வங்கி கணக்குகளை கேட்க முன்வந்துள்ளது. 

இந்த நேரத்தில் தான் இந்தியாவிலும் இந்த பிரச்சனைப் பற்றி பேசப்பட்டது. நிதிஷ் குமார்தான் இதை முதலில் ஆரம்பித்தார். பல்லாயிரக் கோடிகள் இந்தியர்களில் பணம் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாகவும் , அதனை மீட்க வேண்டும் என்றும் சொன்னார். அதை தொடர்ந்து பிரதமர் வேட்பாளர் அத்வானியும்  இதை பற்றி  பேசினார். G-20 மாநாட்டுக்கு செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்க், இதை பற்றி பேச வேண்டும் என்றும், இந்தியர்களின் கணக்கு வழக்கு களைப் பெற்று, அணைத்து பணத்தையும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறினர். மேலும், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நடவடிக்கை எடுக்கப்பட்டு, கருப்பு பணம் மீட்கப் படும் என்று கூறினர். இதற்காக பி ஜெ பி, குருமூர்த்தி, IIM ப்ரோபாசர் வைத்தியநாதன், வக்கீல் மகேஷ் ஜெத்மலானி மற்றும் முன்னால் உளவுத்துறை தலைவர் அஜித் டொவல் ஆகியோர் அடங்கிய நால்வர் குழுவை அமைத்து இது பற்றி ஆராய்ந்து வருகிறது.

சரி...அப்படி எவ்ளோதான் பணம் இருக்கிறது என்று தேடினால்..... Swiss Banking Association ரிபோர்டின் படி சுமார் 1,456 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கிறது. இது இந்தியாவின் மொத கடன் தொகையை விட 13 மடங்கு அதிகம். இதை வைத்து இந்தியாவின் கடனை அடைத்துவிட்டு, மீதமுள்ள தொகையை ஒரு லட்சமாக பங்கிட்டால் சுமார் 45 கோடி பேருக்கு கொடுக்கலாம் என்கிறது ஒரு புள்ளி விபரம். மற்ற நாடுகளின் பண இருப்பை பார்க்கும் போது, இந்திய எங்கேயோ இருக்கிறது...

INDIA $1,456 BILLION
RUSSIA $470 BILLION
U.K. $390 BILLION
UKRAINE $100 BILLION
CHINA $96 BILLION

ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து சுமார் 6௦,௦௦௦ பேர் சுவிசெர்லாந்து செல்வதாகவும் அதில் 20,௦௦௦ பேர் அடிக்கடி செல்வதாகவும் கூறப்படுகிறது. குறைந்தப் பட்சம் பத்து மில்லியன் டாலர்கள் இருப்பு வைக்க வேண்டி உள்ள, சுவிஸ் வங்கிகளில் அனைத்து நாட்டு மக்களை விட இந்தியர்கள் தான் அதிக பணம் வைத்துள்ளனர்.

இந்த பணத்தை எல்லாம் கொண்டு வர எந்த அரசியல் வாதியும் முழுமையான நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஏனென்றால், இந்த பணத்தை வைத்திருப்பர்வர்களே பெரும்பாலும் அவர்கள் தான். ஒரு வேளை, அப்படி யாராவது ஒரு நல்ல அரசியல்வாதி வந்து, பணத்தை எல்லாம் மீட்பாரேயனால், அப்போது தான் உண்மையாகவே "இந்திய ஒளிரும்"

Saturday, March 28, 2009

சில அரிய புகைப்படங்கள்!


தான் வேட்டையாடிய சிறுத்தையின் மீது அமர்ந்திருக்கும் ஒரு இந்திய மகராஜாவின் மகள்! (1920இல்)

கல்கத்தா, காபூலை இணைக்கும் கிராண்ட் த்ரந்க்(Grand Trunk) சாலை. Sher Shah Suri ஆல் கட்டப்பட்ட இந்த சாலை வியாபார முக்கியத்துவம் வாய்ந்தது.

வைஷ்ணவர்கள் என்று அழைக்கப்படும் பிரிவினர்


பிரிட்டிஷ் வானூர்தி 'ஹன்னோ' இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு கடிதங்களை எடுத்து செல்கிறது.

ஆடை அலங்காரத்துடன் நாட்டியமாடும் பெண்கள்


அரிய காட்சி!! ஜனாதிபதியின் அரண்மனை(!) மற்றும் பாராளுமன்டத்தின் Areial View

பம்பாயில் ஒரு 'பார்டியில்' கலந்து கொள்ள வந்திருக்கும் மகளிர் (1910)


ஆங்கிலேயனுக்கு இந்தியர் ஒருவர் மசாஜ் செய்யும் காட்சி


ஜம்மா மசூதி - டெல்லி (built between 1650 and 1658)


Wednesday, March 11, 2009

அமெரிக்காவின் புதிய பொருளாதாரக் கொள்கை!

உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார தேக்கம் பற்றியும் அதனின் தாக்கம் பற்றியும் தினம் தினம் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இந்த பொருளாதார தேக்கத்தால் மிகவும் பாதிக்கப் பட்டிருப்பது அமெரிக்கா மற்றும் ஐரோபிய நாடுகள். ஒவ்வொரு மாதமும் லட்சக் கணக்கான மக்கள் வேலை இழந்து வருகின்றனர். அமெரிக்க மக்களிடையே ஒருவிதமான பயம் நிலவி வந்தாலும், புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள ஒபாமா எதாவது செய்வர் என்று சிறிது நம்பிக்கையோடு இருக்கின்றனர். ஒபமாவும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். முதல் கட்டமாக திவாலாகிக் கொண்டிருக்கும் நிதி மற்றும் தொழில் உற்பத்தி நிறுவனங்களை மீட்டு எடுக்க சுமார் 787 பில்லியன் டாலர்களை வரி பணத்தில் இருந்து வாரி வழங்கி உள்ளார். நல்ல விஷயம் தான். சரிந்து வரும் பொருளாதார நிலையை மாற்ற இது உதவும். ஆனால், நிதி உதவி பெரும் நிறுவனங்களுக்கு அவர் விதித்த கட்டுப்பாடுகள் பல பிரச்சனைகளை கிளப்பி வருகிறது.

நிதி உதவி பெரும் நிறுவனங்கள் அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுமட்டும் அல்லாது, அவர்கள் அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும். உதரணமாக அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட இரும்பு, மற்றும் கட்டுமான பொருட்களையே அவர்கள் வாங்க வேண்டும். "பைய் அமெரிக்கா " (Buy America) என்ற கோஷம் பரவலாக ஒலிக்க தொடங்கியுள்ளது. இது தான் பல்வேறு நாடுகளையும், குறிப்பாக சைனா, இந்திய மற்றும் தெற்கு ஆசியா நாடுகளை கடுப்படையை செய்துள்ளது. இது உலகமயமாக்கலுக்கு எதிரான கோட்பாடு என்று இந்த நாடுகள் கூச்சலிடுகின்றன. அமெரிக்காவில் கூட அரசியல் வாதிகளும், மக்களும் இதை ஆதரித்தாலும், சில நிறுவனங்கள் குறிப்பாக Caterpillar, GE போன்ற நிறுவனகள் இதை எதிர்கின்றன. அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் "இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு உகந்ததல்ல என்றும், மற்ற நாடுகளும் இதே கொள்கையை பின்பற்றினால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கும் " என்றும் கூறியுள்ளனர். 

இது மிகவும் உண்மையான கூற்று. ஏனென்றால், அமெரிக்காவிற்கு முக்கியமான சந்தைகளே இந்தியாவும் சீனாவும் தான். கோக கோளாவில் ஆரம்பித்து Colgate, டெல், எச்பி, இன்டெல்,போர்ட்,GM என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. அமெரிக்கர்களுக்கு அவர்களுடைய பொருட்களை விற்க உலக சந்தையும், தாராள பொருளாதாரக் கொள்கையும் தேவைப் படுகிறது. ஆனால், அவர்கள் மட்டும் மற்ற நாட்டு பொருட்களுக்கும், மனித ஆற்றலுக்கும் தடை விதிக்கின்றனர். உலக வங்கியின் தலைவர் இதை "அபாயகரமானது" என்று வர்ணித்துள்ளார். இது ஒரு "அசிங்கமான" கொள்கை என்று டைம்ஸ் ஒப் லண்டன் வர்ணிக்க, சீன அதிபரோ இதை ஒரு "விஷம்" என்று கூறியுள்ளார்.

இதனால் அமெரிக்காவையே நம்பி வாழும் இந்திய, சீனா போன்ற நாடுகளுக்கு சில நன்மையும் உண்டு. இந்த பொருளாதாரக் கொள்கையினால் அமெரிக்க மோகம் குறைந்து, அவரவர்கள் தங்கள் தாய் நாடுகளுக்கே திரும்பி வருகின்றனர். தங்கள் நாட்டிலேயே "நல்ல " வேலை வைப்புகள் பெருகி வருவதாக இந்தியர்கள் கருதுகின்றனர். சமீபத்தில் வந்த ஒரு கருத்துக்கணிப்பு, புதிய வேலை வாய்ப்புகளை பெருக்கி வரும் நாடுகளில் இந்திய முதலிடத்தில் இருப்பதாக கூறுகிறது. இரண்டாவது இடத்தில் தென்னாப்ரிக்கா உள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பாவும் கதி கலங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த செய்தி மிகவும் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய போன்ற நாடுகள் தங்கள் பொருளாதரத்தை வளர்த்துக் கொண்டல் நன்றாக இருக்கும். ஒரு காலத்தில் அமெரிக்கர்களும், இங்கிலாந்து காரர்களும் இந்தியாவில் வந்து வேலை செய்ய வேண்டி வந்தாலும் வரலாம்!
 
Watch the latest videos on YouTube.com